Saturday, July 6, 2013

அன்னம் என்பது "Anatidae" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும்

அன்னம் என்பது "Anatidae" குடும்பத்தைச்சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றில் 6-7 வகையானவை உண்டு. அவை "Anserinae" எனும் துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றில் Coscobra Swan எனும் இன்னுமொரு வகையும் உண்டு. எனினும் அவை வழமையான அன்னங்களிலிருந்து வேறுபட்டவை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதன் மூலம் இனம்பெருக்குகின்றன. இவை 3 தொடக்கம் 8 வரை முட்டையிடுகின்றன.இவை தனது குறித்த ஜோடியுடனேயே வாழ்க்கை நடத்தும். சில வேளைகளில் ஜோடிகள் பிரிவதும் (விவாகரத்தாவதும்) உண்டு.
அன்னம்
இவை பொதுவாக குளிரான நாடுகளிலேயே அமைதியான நீர் ஏரிகளில் வாழ்கின்றன. இவை அருகிவரும் அழகிய பறவையினமாகும். இலங்கை இந்தியா போன்ற வெப்ப வலய நாடுகளில் இவை அருகியிருப்பினும் ஏனைய சில ரோப்பிய நாடுகளில் இன்னும் வாழ்கின்றன.
தென்னிந்திய அலங்காரங்களில் அன்னப் பட்சி
அன்னப் பட்சி இற்கு இந்தியப் பழங்கதைகளில் கற்பனையான, அபூர்வமான இயல்புகள் பல ஏற்றிச் சொல்லப்பட்டுள்ளன. பாலில் கலந்துள்ள நீரை விடுத்துப் பாலை மட்டும் குடிக்கின்ற பண்பு இதற்கு இருப்பதாகக் கூறப்படுவது இவற்றுள் ஒன்று. இது ஒரு மங்களகரமான குறியீடாகக் கொள்ளப்படுவதன் காரணமாக மரபுவழி அலங்காரங்களிலும், சிற்பம், ஓவியம் முதலிய கலைகளிலும் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. இந்துக்களுக்கு மட்டுமன்றி பௌத்தர்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும் அலங்காரங்களில் அன்னப் பட்சியின் உருவம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

பொருளடக்கம்

இலக்கியங்களில் அன்னம்

சங்க இலக்கியச் சான்றுகளின்படி நோக்கினால் அன்னம் நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஒரு பறவை.[1]

உருவம்

மென்மையான தூவிகளையும், சிவந்த கால்களையும் கொண்டது [2],
கால் சிவப்பாக இருக்கும் [3],
கை கூப்பிக் கும்பிடும்போது கைகள் வளைவதுபோல் கால்கள் வளைந்திருக்கும்.[4]
வலிமையான சிறகுகளை உடையது.[5]

வாழ்விடம்

அன்னம் பொதியமலையில் வாழ்ந்ததாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.[6]
தாழைமரத்தில் அமர்ந்திருக்கும் [7]
செந்நெல் வயலில் துஞ்சும் [8]
குளம் குட்டைகளில் மேயும் நிலம் தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த விலங்கு [9]
கடற்கரை மணல்மேடுகளில் தங்கும் [10]
ஆற்றுப்புனலில் துணையோடு திரியும் [11]
உப்பங்கழிகளில் மேயும் [12]

செயல்

ஆணும் பெண்ணுமாக மாறி மாறி விடியலில் கரையும் [13]
மணல் முற்றத்தில் எகினம் என்னும் பறவையோடு சேர்ந்து விளையாடும்.[14]
மழைமேகம் சூழும்போது வானத்தில் கூட்டமாகப் பறக்கும்.[15]
நன்றாக நெடுந்தொலைவு பறக்கும்.[16]
கூட்டமாக மேயும் வெண்ணிறப் பறவை [17]
பொய்கையில் ஆணும் பெண்ணும் விளையாடும் [18]

அழகு

பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும்.[19]
மயில் போல் ஆடும்.[20]
மகளிரை அன்னம் அனையார் எனப் பாராட்டுவது வழக்கம்.[21]

அன்னத்தின் தூவி

அன்னத்தின் தூவி மென்மையானது [22]
துணையுடன் புணரும்போது உதிரும் அன்னத்தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்படும்.[23]
அன்னத்தின் தூவியை படுக்கை மெத்தையில் திணித்துக்கொள்வர்.[24][25][26]

No comments:

Post a Comment