Friday, August 16, 2013

மலேசியா (Malaysia)

மலேசியா (Malaysia) தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. இந்த நாடு தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு.
மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்).
மேற்கு மலேசியாவையும் கிழக்கு மலேசியாவையும் தென்சீனக்கடல் பிரிக்கின்றது. மலேசியாவின் நில எல்லைகள் [9]தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். நடுவண் அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயாவில் உள்ளது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர். 1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக மிசான் சைனல் அபிடீன் மகுடம் வகிக்கின்றார். மலேசியாவின் பிரதமராக நஜீப் துன் ரசாக் தலைமைப் பொறுப்பில் இருக்கின்றார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது.
கடந்த 50 ஆண்டுகளாக இதன் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 6.5% ஆக இருந்து வருகிறது. வெளிநாடுகள் மிகுதியாக முதலீடுகள் செய்து வருகின்றன. இப்போது சுற்றுலா, அறிவியல், வர்த்தகம் முதலிய துறைகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
2010ஆம் ஆண்டு மலேசியாவின் மக்கள் தொகை 27.5 மில்லியன். தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும்.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தைய காலம்

வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்ப காலம்

கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தை போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது.

சுல்தான்கள்

பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது.

ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள்

1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826 -இல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர்.
இரண்டாம் உலகப்போரின் போது 1943-1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டுக்) கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கெதிராக கொரில்லாப் போர் தொடுத்தனர்.

சமகாலம்

1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது.
சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர்.

ஆட்சிப்பிரிவுகள்

மலேசியாவின் மாகாணங்கள்
மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. [10]
13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[11] ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன.[12] இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன.[13] ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன.[14]
எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தை பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன.[15]

புவியியல்

A view from Low's peak, with a smaller peak to the right of the photo, with forested mountains in the background
கினபாலு மலையின் மிக உயரமான சிகரம், லோ சிகரத்திலிருந்து காட்சி
மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.[16]சிங்கப்பூருடன் ஓர் குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் [17] பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது.[18] நில எல்லைகள் பெரும்பாலும் பெரிலிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.[16] சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது[19]. ஆசிய நிலப்பகுதியிலும் மலாய் தீவுக்கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது.[20] ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள டான்ஜுங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது.[21] சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.[22]

பொருளியல்

மலேசியா பொதுவாக திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாக தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது.[23][24] பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள் மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது.[11] 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது.[25]

மக்கள் தொகையியல்

2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும்[2]. இது உலகளவில் 43வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 %ம், மலாய் இனமல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர் [16] . மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இன பண்பாட்டை பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநில பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர்[16]. மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும்.
மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும் இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர் [16] . இவர்களுக்கு பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் [26]. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் [27] .
மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெறமுடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை [28]. கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்கு குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது.

சமயம்

The wooden Kampung Laut mosque with its minaret and an onion-shaped dome on its tiled roof.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோட பாருவில் கட்டப்பட்ட பள்ளிவாசலே மலேசியாவில் மிகவும் பழையதாகும்
மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் [29] இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாக பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் [30] 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் [30].
சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் [29]. 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் [30].
முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களை சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றை சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் [31].

மொழி

மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாக பயன்படுத்தப்பட்டது. 1969இல் நடந்த கலவரத்துக்கு பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது [32] . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது [33][34]. பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் [35][36].
மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன [37] இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன.[38]. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் [39]. மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர்.

பண்பாடு

A cook making Murtabak, a type of pancake, in an outdoor stall. He is pictured leaning over his custom-made flattened wok filled with pieces of murtabak.
கோலாலம்பூரில் சமையற்காரர் முட்டைகள், இறைச்சி மற்றும் வெங்காயத் துண்டுகள் கலந்த முர்டாபாக் எனப்படும் ஒருவகை தோசையைச் சுடும் காட்சி.
A cook making Char Kuey Teow, a type of flat noodles fried with fish cakes, cockles and bean sprouts.
தட்டை நூடுல்களுடன் மீன் கேக், கிளிஞ்சல்கள், முளைவிட்ட பீன்சு ஆகியவற்றை வறுத்து சமைக்கப்படும் சார் குவே டியோவ் மலேசியாவில் மிகவும் பரவலானது.
மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை.[40]
1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது.[41] மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விட பரப்பப்படும் எனக் கூறியது.[42] இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர்.[41]
மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன.[43] இந்த பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன.[44]
மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும்.

விளையாட்டு

மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாக காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், போர்க் கலை, குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன .[45] இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையை தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது.[46] மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997இல் பதிவு செய்யப்பட்டது.[47] பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது.[48] மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது.[49] ஆகத்து 2010இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது.[50] கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன.[51] மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. 310.408 kilometres (192.88 மை) தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது.[52]
1953இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது.[53] மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.[54] பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன.[55] போர்க் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன.

ஊடகம்

மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன.[56] இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர்.[57] நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்கு குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாக காண்கின்றனர்.[58] மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர்.[59] மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன.[58]
ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது.[60] அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது.[57] 2007இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன;[61] இதனை எதிர்க்கட்சியான சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது.[62] சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும்.[58] அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாக சுட்டப்படுகிறது.[63]

உள்கட்டமைப்பு

A dual highway with greenery on either side
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மலேசியா
மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது.[64] 4.7 மில்லியன் நிலைத்த இட தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது.[65][66] மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமானத் துறைமுகமாக கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன.[45] 95% மக்களுக்கு தூய குடிநீர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விட பின்தங்கி உள்ளன.[67] தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது.[65]
மலேசியாவில் 98,721 kilometres (61 மை) தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் 1,821 kilometres (1 மை) தொலைவு விரைவுச்சாலைகளாகும்.[16] நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை 800 kilometres (497 மை) தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன் தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன.[68] மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; 1,849 kilometres (1 மை) தொலைவிற்கு சேவை அளிக்கின்றன.[16] கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.[69] ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[64]
வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது.[70] நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது.[71] இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது.[70] 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[71] எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது.[72] மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது.[73]

Thursday, August 15, 2013

புற்றுநோய் - Cancer


Cancer
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
Tumor Mesothelioma2 legend.jpg
A coronal CT scan showing malignant cancer of the lung sac.
Legend: → tumor ←, ★ central pleural effusion, 1&3 lungs, 2 spine, 4 ribs, 5 aorta, 6 spleen, 7&8 kidneys, 9 liver.
DiseasesDB 28843
MedlinePlus 001289
பாடத் தலைப்பு D009369

புற்றுநோய் (மருத்துவப் பெயர்: புற்றுத்திசு உடற்கட்டி) என்பது கட்டுப்பாடற்று கலங்கள் (செல்கள்) பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்தக் கலங்கள் பிரிந்து பரவி மற்ற தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுக்கலங்கள் குருதியின் வழியாகப் பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும் எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. மேலை நாடுகளில் இறப்பிற்கான முதன்மைக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
செல்களில் துவங்கும் பல ஒன்றுக்கொன்று சம்பந்தமுடைய நோய்களின் தொகுப்பே புற்று நோய் ஆகும். உடலானது பல வகையான செல்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து பிரிந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த செல்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான செல்கள், வளர்ச்சி (growth) அல்லது கழலை (Tumor) எனப்படும் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
எல்லாக் கழலைகளும் (டியூமர்) புற்று நோய் போன்றவையல்ல. கழலைகள் தீங்கில்லா கழலைகள் (benign tumours) மற்றும் கேடுவிளைவிக்கும் கழலைகள் (malignant tumours) என இருவகைப்படும்.
தீங்கில்லா கழலைகள் புற்றுநோய் அல்ல. அவற்றை பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, மீண்டும் தோன்றுவது இல்லை. தீங்கில்லா கழலைகளில் உள்ள செல்கள் மற்ற உடல் பகுதிகளுக்கு பரவுவதில்லை.
கேடு விளைவிக்கும் கழலைகள் என்பவை புற்று நோயாகும். கேடு விளைவிக்கும் கழலையில் உள்ள செல்கள் இயல்புக்கு மாறாகவும் எந்த கட்டுப்பாடுமின்றியும் பிரிவுற்று பெருகும். இப்படி ஏற்பட்ட புற்றுநோய் செல்கள் இதனை சுற்றியுள்ள திசுக்களுக்குள் சென்று அவற்றை அழித்துவிடும். புற்றுநோய் செல்கள் கேடு விளைவிக்கும் கழலைகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்துவிடும்.
இரத்த நாளங்கள் (ஆர்டரி-தமனி, வெய்ன்-சினை, கேட்டல்லரி-நுண்ணாளி) மூலம் இரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம் (லம்பாடிக் சிஸ்டம்), நிணநீருடன் இரத்த வெள்ளை அணுக்களை, நிணநீர் நாளங்கள் உடலில் உள்ள எல்லா திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும். கேடு விளைவிக்கும் கழலை உடைந்து, அதிலிருந்து வெளிவரும் புற்றுநோய் செல்கள், இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்தின் மூலம் மற்ற உடல் உறுப்புகளுக்குச் சென்று அப்பகுதியில் கழலைகளை ஏற்படுத்துகிறது. இவ்வாறு புற்று நோய் பரவுவதை திசுத்தொற்று (மெடாஸ்டாஸிஸ்) (metastasis) என்பர்.
இது ஒரு வகையான பரம்பரை அலகுகளில் (gene or in chromosomal DNA region) ஏற்படும் மாற்றங்களினால் அல்லது டி.என்.ஏ க்களில் பிறழ்வுகளை தூண்டும் பொருள்களினால் (புற்று நோயூட்டி or carcinogen) அல்லது தீ நுண்மங்களினால் (virus, ex Human Papilloma virus) ஏற்படும் நோய் ஆகும. உயிரணு பிரிதலை கட்டுப்படுத்தும் (Ex. Retinoblastoma protein) அல்லது புற்று நோய் வரமால் தடுக்கும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளினால் உயிரணு பிரிதல் கட்டுப்பாடுகள் அல்லது ஒருங்கமைவுகள் (regulation) இல்லமால் ஊக்கமடைந்து (proliferation) புற்று நோய் உருவாகிறது. இவ்வாறு தோன்றும் புற்று செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் (லிம்ப்) வழியாக உடலின் மற்ற பாகங்களை அடைந்து நிவாரணம் செய்யமுடியாத நிலைக்கு கொண்டு செல்கின்றன. இவ்வாறு புற்று செல்கள் கடந்து செல்லும் நிலைக்கு மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) எனப்பெயர். அண்மைய ஆய்வுகளில் குறு ஆர்.என்.ஏ (microRNA) க்களில் ஏற்ப்படும் மாற்றங்களினாலும் புற்று நோய் தூண்டுப்படுவதாக உறுதி செய்துள்ளது. மேலும் புற்று உயிரணுக்களில் மிக குறைந்த அளவுகளில் புற்று குருத்தணுக்களை (cancer stem cells, Glioblastoma stem cell) அண்மையில் கண்டறிந்துள்ளார்கள். இவை அந்தந்த உறுப்புகளில் நிலவும் சாதரண குருத்தணுக்களில் (normal stem cells, ex. neuronal stem cells) உள்ள கல குறிகைகளில் (cell signaling pathway) ஏற்ப்படும் பிறழ்வுகளால் புற்று குருத்தணுக்களை தோற்றுவிக்கின்றன.
புற்று நோய் சில வேளைகளில் ஒரு குறிபிட்ட இடத்தில் கட்டியாக வெளிப்படுவதை தீங்கற்ற கட்டி அல்லது பெனின் (benign) கட்டி என அழைக்கப்படும். அவை தன்னிடத்திலேயே எல்லைக்கு உட்பட்டு அடங்குபவை ஆகும், மேலும் அவை ஊடுருவி தாக்கவோ அல்லது இதர இடங்களுக்கு பரவவோ செய்யாது. பொதுவாக இக்கட்டிகளை குறிபிட்ட இடத்தில் அகற்றி விட்டால், புற்று நோயின் தாக்கம் இல்லை என நம்பலாம். பின்னாளில் கண்ணுற்ற புற்று குருத்தணுக்களால் மீண்டும் புற்று தாக்கும் என தெரிகிறது. மிக குறைந்த அளவில் உள்ள புற்று குருத்தணுக்கள் மறுபடியும் புதுபித்து (self=renewal), பெருகி புற்று செல்களாக உருமாற்றம் அடைய வாய்ப்புகள் வெகுவாக உள்ளன. இக்கரணியத்தால் நாம் உட்கொள்ளும் மருந்துகள் புற்று குருத்தணுக்களையும் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகவும், அதே வேளையில் சாதரண குருத்தணுக்களை பாதுகாக்கும் வண்ணம் அமைய ஆய்வுகள் தொடர்கின்றன. ஆனால் சில நோய்கள், எடுத்துக்காட்டாக இரத்தப்புற்றுநோய், கட்டி இல்லாமலேயே தாக்கும். மருத்துவ முறைகளில் புற்றுநோயைப்பற்றி படித்தல், கண்டறிதல், சிகிச்சை அளித்தல், புற்றுநோயை தடுத்தல் அனைத்தும் அடங்கிய மருத்துவப்பிரிவினை ஆன்கோலோஜி புத்தாக்கவியல் (புற்றுநோயியல்) என்று அழைக்கப்படுகிறது.
புற்று நோய் மாந்தரை எந்த அகவையிலும் தாக்கலாம் என்றாலும் கூட, வயது ஏற ஏற அதற்க்கான வாய்ப்புகள் வேகமாக கூடுகின்றன.[1] புற்றுநோய் காரணமாக சுமார் 13% மனித இன இழப்பு ஏற்பட்டு வருகிறது.[2] அமெரிக்கன் கான்செர் சொசைடி நடத்திய கணிப்பின்படி, உலகில் 7.6 மில்லியன் மக்கள் புற்றுநோய் காரணமாக 2007 ஆண்டில் உயிர் இழந்தனர்.[3] புற்றுநோய் எல்லா விலங்குகளையும் தாக்கக்கூடியது.
பொதுவாக நிறப்புரியில் ஏற்படும் பிறழ்வுகளால் அல்லது மாற்றங்களால், ஒரு உயிரணு புற்று செல்களாக மாற்றப்படும். இந்நிகழ்வுக்கு உருமாற்றம் (transformed cells) எனப்பெயர். இவ்வாறு உருமாற்றம் அடைந்த உயிரணுக்கள் கட்டுப்பாடு இன்றி பல்கி பெருகி புற்றணுவை உருவாக்குகிறது.[4] இவ்வகையான ஒவ்வாத இயல்பு மாற்றங்களுக்கு புற்று ஊக்கிகள், எ.கா.புகையிலை புகை, கதிர் இயக்கம் , வேதியியல் பொருள்கள், அல்லது தொற்றுநோய் பரப்பும் பொருட்கள் காரணமாக அமைகிறது. மேற்கூறிய பொருட்கள் டி.என்.ஏ நகலாக்கம் அல்லது அச்செடுத்தலின் போது பல்வேறு வகையான பிறழ்வுகளை தூண்டுவதால் புற்று செல்கள் தோன்றுகின்றன. சில வேளைகளில் புற்று நோய் மரபு வழியாகவும் கடத்தப்படும். இந்த புற்றுநோயின் பாரம்பரியத்திறன்ஆனது புற்று ஊக்கிகளுக்கும் இடத்தையளிக்கும் ஜெனோம்களுக்கு இடையே நடக்கும் சிக்கலான இடைவினைகளால் வழக்கமாக பாதிப்படைகின்றன. நோய் தோற்ற வகையினை கண்டறியும் புதிய கண்டுபிடிப்பான மெத்தைலேற்றம் மற்றும் குறு ஆர்.என்.ஏ தற்போது மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகிறது.
பொதுவாக புற்று உயிரணுக்களில் இரு வகையான மாற்றங்களை காணலாம்.
௧.மிகையான உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் (Oncogene)
௨. புற்று உயிரணுக்களை கட்டுப்படுத்தும் மரபணுவில் (tumor suppressor genes) ஏற்படும் பிறழ்வுகள்.
முதல் வகையில், உயிரணு பிரிதலை ஊக்கிவிக்கும் மரபணுக்கள் வெளிப்பாடு வெகுவாக்கப்படுவதால் (Bcl2) அவைகள் கட்டுப்பாடுகள் இல்லாத செல் பிரிதலை ஊக்கவிக்கும். இவ்வகையான மரபணுக்கள் நமது உடலில் நடைபெறும் உயிரணு இறப்பை அல்லது திட்டமிடப்பட்ட உயிரணு இறத்தல் (Apoptosis or Programmed cell death) என்னும் நிகழ்வை தடுக்க வல்லவையால் , உருமாறிய உயிரணுக்கள் பல்கி பெருகுவதற்கு துணை புரிகின்றன.
இரண்டாவது நிகழ்வில், இயற்கையாக நமது உடலில் உள்ள புற்றுகளை மட்டுப்படுத்தும் மரபணுவில் (p53) ஏற்படும் பிறழ்வுகளால் , புற்று உயிரணுக்கள் பல்கி பெருகுவது ஊக்குவிக்கப்படுகிறது.
புற்று நோயின் அறிகுறியாக கட்டிகள் அமைந்தாலும், அதனை உறுதிபடுத்த திசுக்கள் ஆய்வுக்கு உட்ப்படுத்தபட்டே புற்று உள்ளதா? இல்லையா ? என அறியப்படும். வீரிய புற்றுகள் (Malignant tumor) கதிரியயக்க படமாக்கத்தில் மூலம் அறியலாம். ஒரு திசுவின் இழையவியலுக்குரிய சோதனை உடல் திசு ஆய்வு மூலம் அதற்குரிய நோயியல் மருத்துவரின் உதவியுடன் நோயை அறுதிசெய்துகொள்வது அவசியமாகும். புற்றுநோயின் வகை, இடம் மற்றும் நிலையைப் பொறுத்து மிக்க புற்றுநோய்களுக்கும் சகிச்சை அளிக்கலாம், சில வகைகளை குணப்படுத்தலாம். ஒருமுறை அறுதி செய்தபின், பொதுவாக புற்றுநோய் அறுவை சிகிச்சை, கெமொதெராபி (வேதிச்சிகிச்சை), கதிரியக்கச்சிகிச்சை ஆகிய மூன்று முறைகளும் அடங்கிய வகைகளில் சிகிச்சை அளிக்கலாம். மேலும் ஆராய்ச்சி மேம்பட்டு வருவதால், சிகிச்சை முறையும் ஒவ்வொரு வகை புற்றுநோய் வகைக்கும் ஏற்றவாறு தனிப்பட்ட வகையில் மாற்றமடைந்து வருகின்னறன. குறிவைத்த சிகிச்சை மருந்துவகைகளில், அவை சில கட்டிகளில் தனிப்பட்ட முறையில் சில மூலக்கூற்று பிறழ்தல்களை குறிவைத்து, மேலும் இயற்கையாக இருக்கும் கலன்களை அதிக பாதிப்பு அடையாமல் செயல் புரியும் மருந்துகளின் மேம்பாட்டில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோயாளிகன் முன்கணிப்பு மிக்கவாறும் புற்றுநோயின் வகை மற்றும் அதன் நிலைமை, அல்லது நோயின் பரிமாணத்தை பொறுத்திருக்கும். மேலும், இழையவியலுக்குரிய தரம்பிரித்தல் மற்றும் சில குறிப்பிட்ட மூலக்கூற்று அடையாளம் காட்டிகளை முன்னிலையில் வைத்தலும், முன்கணிப்பிற்கு பயன்படுகிறது, மேலும் தனிப்பட்ட நோயாளி சார்ந்த சிக்ச்சையையும் அளிக்க உதவுகிறது.

பொருளடக்கம்

கிளவியாக்கம்:

மேலதிக தகவல்கள்: List of oncology-related terms
கீழே வழங்கிய நெருக்கமாக உறவு கொண்ட சொற்கள் நியதிக்கு மாறான, முறைபிறழ்ந்த வளர்ச்சியை குறிக்கும்.
புற்று கட்டி (Tumor) :
புற்று கட்டி என்னும் சொல் வழக்கத்துக்கு அல்லது இயல்புக்கு மீறிய வீக்கம், திரள், கட்டி, கழலை அல்லது நிறையைக் குறிக்கும். எனினும் தற்போதைய ஆங்கிலத்தில், இக்கிளவி திடமான புற்று கட்டியை குறிக்கும். சில புற்றுகள் எ.கா. குருதி புற்று நோய் (Leukemia) திடமான கட்டியாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.
திசுக்குவிப்பு (நியோப்லாசம்):
அறிவியலின் படி, உயிரணுவில் ஏற்படும் பிறழ்வுகளால் உருமாற்றம் அடைந்த, பல்கி பெருகும் தன்மை உள்ள உயிரணு ஆகும். இவைகள் வீரியம் (Malignant) அல்லது வீரியமற்ற (benign) புற்று என இருவகைபடும்.
வீரியபுற்று or மாலிக்னன்ட் நியோப்லாசம்: இது புற்றுநோயை குறிப்பது
வீரியமற்ற (benign) புற்று: குறிபிட்ட ஒரு இடத்தில் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ள கட்டியை குறிக்கும். இவை மற்ற இடங்களுக்கு பரவிச் செல்லும் தன்மை கொண்டவை அல்ல.
வெகு வீரிய புற்று (Invasive tumor):இநிலையில் உள்ள புற்றுகள் மற்ற செல்களுக்கு பரவிச் சென்று தாக்கும் தன்மை கொண்டவை.
ப்ரி-மாலிக்னன்சி , ப்ரி-புற்றுநோய் அல்லது நான்-இன்வாசிவ்: இச்சொல் புற்றுநோயை குறிப்பது என்றாலும், வீரியமற்ற எளிதில் குணப்படும் நிலையில் உள்ளவை. கவனமற்ற முறையில் இருந்தால், வீரிய புற்று நோயாக மாறிவிடும் தன்மை உள்ளவை.
கீழே வழங்கிய குறிச்சொற்களை புற்றுநோயை குறிப்பிட பயன்படுத்தலாம்:
பகுத்து தேர்ந்தெடுத்தல்:
ஒருவருக்கு புற்று உள்ளதா? இல்லையா என்பதை அறிய தன்னாய்வு மேற்க்கொள்ளலாம். புற்று வருவதற்கு முன், மம்மோக்ராம் (முலை ஊடுகதிர்ப்படம் சோதனை) என்னும் ஆய்வு மூலம் கண்டறியலாம்.
அறுதி ஆய்வு: (Diagnosis)
உடலில் இருக்கும் கட்டி புற்று நோயா ? அல்லது இயல்பு கட்டியா என்பதை அறியும் ஆய்வு இதுவாகும். உடல் திசு ஆய்வு (Biopsy) என்னும் செய்முறை மூலம் புற்று என்பதை அறுதியிடலாம். ஆய்வுக்கு குறிபிட்ட கட்டியை அறுவை மூலம் வெளியில் எடுத்து, அவை புற்று உயிரணுக்களை கொண்டுள்ளனவா? எனபதை உரிய மருத்துவர், நோய்க்குறியியல் மருத்துவர் (pathologist) கொண்டு கண்டறியலாம்.
கட்டியகற்றல்: (Surgical excision)
புற்று என ஐயப்படும் கட்டியை அறுவை முறை மூலம் அகற்றுதல்.
அறுவை விளிம்பு பகுதிகள்
உடலில் கட்டி அகற்றிய பகுதிகளை நோய்க்குறியியல் மருத்துவர் கொண்டு ஆய்வுக்கு உட்ப்படுத்தும் நிலை ஆகும். பொதுவாக கட்டியை அகற்றும்போது அதனை சார்ந்துள்ள அனைத்து புற்று செல்களும் அகற்ற வேண்டும். முழுமையான அகற்றலுக்கு எதிர்மை விளிம்ப்புகள் (negative margins) என்றும், அரைகுறையான அகற்றலுக்கு நேர்மை அல்லது நேர்ம விளிம்ப்புகள் (positive margins) எனப்படும்.
தரம் பகுத்தல்: (Grade)
புற்று நோயின் வீரியத்தை பொறுத்து, அதனை ஒன்று அல்லது இரண்டு (நான்கு வரைக்கும்) நோய்க்குறியியல் மருத்துவரை கொண்டு பகுக்க வேண்டும். பொதுவாக மூன்று அல்லது நான்காவது தரத்திற்கு உள்ள (grade 3 or 4) புற்று நோயானது மிகு வீரியத்தை கொண்டு மற்ற செல்களுக்கு பரவிய நிலையை குறிக்கும்.
நிலை: (stage)
புற்று ஆய்வாளர்களை (Oncologist) கொண்டு தரம் பிரிக்கும் ஆய்வாகும். இந்நிலையிலும் ஒன்று முதல் நான்கு வரை தரம் பிரிக்கப்படுகிறது.
மறுபிடிப்பு: (Recurrence)
கட்டியகற்றிய பகுதியில் இருந்து மீண்டும் கட்டி தோன்றும் நிலையாகும்.
மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்)
கட்டியகற்றிய பகுதியில் இருந்து உடலின் மற்ற பகுதியில் கட்டி தோன்றும் நிலையாகும்.
வீரிய உருமாற்றம்:
தரம் பகுத்தலில் பகுப்பு ஒன்று (Grade 1) என்ற நிலையில் இருந்து மிக வீரிய பகுப்பான மூன்று அல்லது நான்காவது நிலையை அடைவதை குறிக்கும்.
வேதி மருத்துவம் : வேதி மருந்துகள் கொண்டு வைத்தியம் செய்தல்
கதிரியக்க மருத்துவம்: கதிரியக்கம் கொண்டு சிகிச்சையளித்தல்.
துணை மருத்துவம் (Adjuvant therapy) :
கெமொதெராபி (வேதிச்சிகிச்சை) வகையிலோ, அல்லது ரேடியேஷன் தெராபி (கதிரியக்க சிகிச்சை)வகையிலோ, மீதமுள்ள புற்றுநோய் அணுக்களை அழிப்பதற்காக அளிக்கப்படும் சிகிச்சை.
ப்ரோக்நோசிஸ் (முன்கணிப்பு) : மருத்துவத்திற்கு பின் குணமடைதலுக்கான நிகழ்தகவு. நோய் அறிகுறி அறிந்து ஐந்து வருடங்களுக்குப்பிறகு பிழைத்திருப்பதற்கான சாத்தியக்கூறின் பொதுவான முன்கணிப்பு. மாற்றாக, அது 50% (விழுக்காடு) நோயாளிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வருடங்களின் எண்ணிக்கை. இரு எண்களும் நூற்றுக்கணக்கான ஒரேவகை நோயாளிகளின் திரட்டைக்கொண்டு புள்ளி விவரக்கணக்கு முறைகள்படி ஆராயந்து அவற்றிலிருந்து கணித்த காப்லான் -மையேர் வளைவு வரைபடத்தை ஆதாரமாக கொண்டது.

வகையாக்கம்

மேலதிக தகவல்கள்: List of cancer types

ஒரு பெரிய பரவும் குழல் கார்சினோமா (புற்றுநோய்) ஒரு முலை நீக்கம் மாதிரி.

கட்டி எந்த வகையானது என்பதைப்பொறுத்தே புற்றுநோய் வகையாக்கம் செய்யப்பட்டுள்ளது, அதனால், அதன் திசுவானதே அந்த கட்டியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அவற்றின் ஹிச்டோலோஜியும் (கலனமைப்பியல்; திசு இயல்) பாதித்த இடமும், முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான சில பகுப்புகளின் எடுத்துக்காட்டு :
புற்றுப்பண்பு கொண்ட கட்டிகளுக்கு (புற்றுநோய்களுக்கு) -கார்சினோமா (-புற்றுநோய்), -சர்கோமா (-சதைப்புற்று) அல்லது -ப்ளாஸ்டோமா (-கருத்திசுக்கட்டி) என்ற பின் ஒட்டுச்சொல்லை பயன்படுத்துவது வழக்கம், மேலும் முன் பாகத்தில் பாதிப்படைந்த உடலுறுப்பின் கிரேக்க அல்லது லத்தீனிய மூலப்பெயர் இணைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கல்லீரலில் ஏற்படும் புற்று நோயினை ஹெபடோ-கார்சினோமா (கல்லீரல்-புற்றுநோய்); கொழுப்பு உயிரணுக்கள் காரணம் வரும் கட்டி லிபோ-சர்கோமா (கொழுப்பணு-சதைப்புற்று). பொதுவான புற்றுநோய்களுக்கு, ஆங்கில உடற்சொல் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டிற்கு, மிகவும் பொதுவகையான மார்பக புற்றுநோய் டக்டால் கார்சினோமா ஒப் தி பிரெச்ட் (மார்பக நாள புற்றுநோய்) அல்லது மம்மரி டக்டால் கார்சினோமா (முலையின் நாளப்புற்றுநோய்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு, உரிச்சொல்லான டக்டால் உருபெருக்கிக் கண்ணாடியில் (மைக்ரோஸ்கோப்) பன்மடங்கு அளவில் காட்சி தரும் பொதுவான மார்பக நாளங்களைக் குறிக்கிறது.
தீங்கற்ற கட்டிகளை (அவை புற்றுநோய் அல்ல) பெயரிடுகையில் -ஓம என்ற பின் ஒட்டுச்சொல், உடல் பாகத்தை மூலமாக கொண்டு சேர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கருப்பையில் உள்ள மழமழப்பான திசுவில் வழங்கும் ஒரு தீங்கற்ற கட்டி்யை லேயிஒம்யோமா (தசைத்திசுக்கட்டி) என்று பெயரிட்டுள்ளார்கள் (இந்த அடிக்கடி பாதிக்கும் கட்டியின் பொதுவான பெயர் பைப்ரொயிட் (நார்த்திசுக்கட்டி) ) ஆகும். நற்பேறற்றமையாக, சில புற்றுநோய்களுக்கும் இந்த -ஓம என்ற பின் ஒட்டு பயன்படுத்துவதுண்டு, எடுத்துக்காட்டு, மெலனோமா (கருங்கட்டி) மற்றும் செமிநோமா (விரைப்புற்று).

கட்டி எந்த வகையானது என்பதைப்பொறுத்தே புற்றுநோய் வகையாக்கம் செய்யப்பட்டுள்ளது, அதனால், அதன் திசுவானதே அந்த கட்டியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அவற்றின் ஹிச்டோலோஜியும் (கலனமைப்பியல்; திசு இயல்) பாதித்த இடமும், முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான சில பகுப்புகளின் எடுத்துக்காட்டு :
புற்றுப்பண்பு கொண்ட கட்டிகளுக்கு (புற்றுநோய்களுக்கு) -கார்சினோமா (-புற்றுநோய்), -சர்கோமா (-சதைப்புற்று) அல்லது -ப்ளாஸ்டோமா (-கருத்திசுக்கட்டி) என்ற பின் ஒட்டுச்சொல்லை பயன்படுத்துவது வழக்கம், மேலும் முன் பாகத்தில் பாதிப்படைந்த உடலுறுப்பின் கிரேக்க அல்லது லத்தீனிய மூலப்பெயர் இணைக்கப்படும். எடுத்துக்காட்டாக, கல்லீரலில் ஏற்படும் புற்று நோயினை ஹெபடோ-கார்சினோமா (கல்லீரல்-புற்றுநோய்); கொழுப்பு உயிரணுக்கள் காரணம் வரும் கட்டி லிபோ-சர்கோமா (கொழுப்பணு-சதைப்புற்று). பொதுவான புற்றுநோய்களுக்கு, ஆங்கில உடற்சொல் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டிற்கு, மிகவும் பொதுவகையான மார்பக புற்றுநோய் டக்டால் கார்சினோமா ஒப் தி பிரெச்ட் (மார்பக நாள புற்றுநோய்) அல்லது மம்மரி டக்டால் கார்சினோமா (முலையின் நாளப்புற்றுநோய்) என்று அழைக்கப்படுகிறது. இங்கு, உரிச்சொல்லான டக்டால் உருபெருக்கிக் கண்ணாடியில் (மைக்ரோஸ்கோப்) பன்மடங்கு அளவில் காட்சி தரும் பொதுவான மார்பக நாளங்களைக் குறிக்கிறது.
தீங்கற்ற கட்டிகளை (அவை புற்றுநோய் அல்ல) பெயரிடுகையில் -ஓம என்ற பின் ஒட்டுச்சொல், உடல் பாகத்தை மூலமாக கொண்டு சேர்க்கிறார்கள். எடுத்துக்காட்டாக, கருப்பையில் உள்ள மழமழப்பான திசுவில் வழங்கும் ஒரு தீங்கற்ற கட்டி்யை லேயிஒம்யோமா (தசைத்திசுக்கட்டி) என்று பெயரிட்டுள்ளார்கள் (இந்த அடிக்கடி பாதிக்கும் கட்டியின் பொதுவான பெயர் பைப்ரொயிட் (நார்த்திசுக்கட்டி) ) ஆகும். நற்பேறற்றமையாக, சில புற்றுநோய்களுக்கும் இந்த -ஓம என்ற பின் ஒட்டு பயன்படுத்துவதுண்டு, எடுத்துக்காட்டு, மெலனோமா (கருங்கட்டி) மற்றும் செமிநோமா (விரைப்புற்று).

அறிகுறிகள்


கான்சரின் மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) அறிகுறிகள் (கட்டி) டுமோரின் இடத்தை பொறுத்தது.
பருமட்டாக, புற்றுநோய் அறிகுறிகளை மூன்று குழுக்களாக பிரிக்கலாம்:
மேற்கூறிய பட்டியலில் ஒவ்வொரு அறிகுறியும் பல வேறுபாடுகள் கொண்ட நிலைமைகளால் ஏற்படலாம், (அதன் பட்டியல் இடுதலை பிரித்திறுதியீடு ) என்பர். ஒவ்வொரு பொருளின் பொதுவான அல்லது பொதுவல்லாத காரணமாக புற்றுநோய் இருக்கலாம்.

காரணங்கள்

புற்றுநோய் என்பது வெவ்வேறான பலபிரிவுகள் கொண்ட நோய்வகைகளை சாரும், அவை அதன் காரணங்களிலும், உயிரியலிலும் பரவலாக வேறுபடுகின்றன. எந்த உயிரினம் ஆனாலும், தாவரங்களுக்கும் கூட, புற்றுநோய் வரலாம். இதுவரை தெரிந்த அனைத்து வகை புற்றுநோய்களும் படிப்படியாகத்தான் எழுகின்றன, பிழைகள் ஆனது ஒன்றொன்றாக புற்றுநோய் உயிரணு அதன் குழந்தைகளான அடுத்த தலைமுறையினரிலும் சேர்ந்து குவியும்போது எழுகிறது.(பொதுவான பிழைகள் எழும் விதங்ககளை அறிவதற்கு இயக்கமுறைப் பிரிவை பாருங்கள்).
ஏதொன்று (நமது) உயிரணுக்ககளை தன் பிரதி அமைக்கின்றதோ, அவற்றில் பிழைகள் ஏற்படும் சாத்தியக்கூறு களால் பாதிக்கப்படுகின்றன. (திசு மரபு பிறழ்வுகள்). பிறழ்வுகளை (பிழைகளை) திருத்துவது மற்றும் தடுப்பதை சரிவர செய்யாவிட்டால், பிறழ்வுகள் பிழைத்துக் கொள்ளும், மேலும் அவை அதன் மகள் உயிரணுக்களை சென்றடையும். பொதுவாக, நம் உடல் நம்மை புற்றுநோய்க்கெதிராக பல வகைகளில் பாதுகாக்கிறது, எடுத்துக்காட்டு : அபோப்டொசிஸ், (திட்டமிட்ட செல் மரணம்) ஏற்பட உதவும் அணுத்திரள்கள் (சில டிஎன்ஏ போளிமேரேசஸ்), (செநேச்சென்ஸ்) மூப்படைவதாக இருக்கலாம். எனினும், பிழைகள் மேலும் எழுவதற்கும் மேம்படுவதற்கும் ஏற்ற தனி சூழ்நிலைகளில், இவ்வகையான பிழை-திருத்தும் முறைகள் பலதடவை சிறு காரணங்களால் தோல்வி அடைகின்றன. எடுத்துக்காட்டாக, இச்சூழ்நிலைகளில் கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்), எனப்படும் தகர்க்கும் புற்று ஊக்கி்ப்பொருட்களை உள்ளடிக்கி இருக்கலாம் அல்லது காலப் போக்கில் ஏதேனும் ஒரு காயமோ (உடல், வெப்பம், போன்ற காரணங்களால்), அல்லது உயிரணுக்களால் தாங்க முடியாத இதர சுற்றுச்சூழல்கள் அமைந்திருக்கலாம், எடுத்துக் காட்டு ஹைபோக்சியா (உயிர்வளிக்குறை)[5] (உட்பிரிவுகளை பார்க்கவும்). புற்றுநோய் இப்படியாக நாளுக்கு நாள் முன்நோக்கி செல்லும் வியாதி ஆகும், மேலும் இவ்வகையான முன்நோக்கி செல்லும் பிழைகள் சிறுகச்சிறுக குவிந்துவிடும்போது விலங்கின் ஒரு கலமானது தனது செயல்பாடுகளுக்கு எதிராக செயல்பட துவங்குகிறது.
புற்றுநோயில் பிழைகளை பெருகவைக்கும் பிழற்வுகள் தன்னைத்தானே பெருக்கும் தன்மையை சார்ந்தது, முடிவில் அது (பணத்தைப்போல்) அடுக்கேற்ற விரைவில் பெருகிக்கொண்டே போகும். எடுத்துக்காட்டு:
  • ஒரு கலனில் பிழை திருத்தும் எந்திர இயல் விகாரமடைந்து கலனிலும் அதன் பிறப்புகளிலும் அதிவிரைவில் பிழற்வுகளை மேலும் குவிய வைக்கலாம்.
  • ஒரு கலனின் சைகைகளை அனுப்பும் (நாளமில்லா உட்சுரப்பு சார்ந்த) எந்திர இயல் விகாரம் அடைந்து அருகாமையில் இருக்கும் கலன்களுக்கு பிழைகளை உருவாக்கும் சைகைகளை அனுப்பலாம்.

  • ஒரு விகாரம் (பிறழ்வு) ஆனது உயிரணுக்களில் நியோப்பிளாஸ்டிக் மாற்றங்களை உருவாக்கலாம், அதனால் அவை மற்ற இடங்களுக்கு சென்று ஆரோக்கியமான உயிரணுக்களை தகர்த்து அழிக்கலாம்.
  • ஒரு விகாரமானது ஒரு கலனை அமரனாக செய்யலாம் (பாருங்கள் டெலோமியர்ஸ் (கடைத் துணுக்கு)), அவை ஆரோக்கியமான உயிரணுக்களை என்றென்றைக்கும் தகர்க்கலாம்.
இப்படியாக புற்றுநோய் சில பிழைகளால் ஒரு தொடர் விளைவு ஏற்படுவதால், அவை மேலும் கூடுதலான பிறழ்வுகளுக்கு காரணமாகிறது. பிழைகளால் மேலும் பிழைகள் ஏற்படுவதே புற்றுநோயின் மூல காரணம் ஆகும், மேலும் அதனாலே அதை குணப்படுத்துவதும் கடினமாக இருப்பது :அங்கு 10,000,000,000 புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட உயிரணுக்கள் இருந்து, அவற்றில் பத்து உயிரணுக்களைத்தவிர மற்ற அனைத்தையும் அழித்துவிட்டாலும், இந்த உயிர்பிழைத்த பாதிப்படைந்த உயிரணுக்கள் (மற்றும் பிழைகளுக்கு வழிவகுக்கும் இதர புற்றுமுன்னோடி உயிரணுக்கள்) திரும்பவும் தன்னை-தானே உருவாக்கவோ, அல்லது பிழற்வுகளை ஊக்குவிக்கும் சமிஞைகளை இதர உயிரணுக்களுக்கு அனுப்பவோ செய்து, மீண்டும் இப்பிரச்சினைகளை உருவாக்கும். இந்த கிளர்ச்சி கலந்த சூழ்நிலை, ஒரு தேவையற்ற தக்கனபிழைத்துவாழ்தல், இதில் பரிணாம வளர்ச்சியை தூண்டும் உந்து விசைகளை உடலின் வடிவமைப்புக்கு எதிராக வேலை செய்வதோடல்லாமல் ஒழுங்குமுறைகளை செயலாக்குவதையும் தடைசெய்கிறது. உண்மையில், ஒரு முறை புற்றுநோய் வந்துவிட்டால், இந்த விசையானது மேலும் பரவும் நிலைமைக்கு கொண்டுசெல்கிறது, மேலும் அதனை க்லோனல் (முளைவகை) பரிணாம வளர்ச்சி என்று அழைக்கிறோம்.[6]
புற்றுநோய்க்கான காரண ஆய்வுகள் கீழே கொடுத்துள்ள பகுப்புகளுக்கு உற்பட்டவை:
  • முகவர்கள் (எ.கா.நோய்க்கிருமிகள்) மற்றும் நிகழ்வுகள் (எ.கா.விகாரங்கள்/ பிறழ்வு) அவை மரபியல் மாறுபாடுகளை எளிதாக்கி புற்றுநோயை ஏற்படுத்தும்.
  • உயிரணுக்களில் ஏற்படும் மரபுக்கருவில் சேதத்திற்கான துல்லியமான இயல்பு காரணி மேலும் அவற்றால் பாதிப்படைந்த மரபணுக்கள்.
  • இந்த மரபியல் மாறுபாடுகளால் கலன்களின் உயிரியலில் ஏற்படும் விளைவுகள், உருவாகும் நிலை மற்றும் உருவாகிய புற்றுநோய் கலனின் குணங்கள், மேலும் கூடுதலான மரபணு சார்ந்த நிகழ்வுகளுக்கு காரணிகளாக இருந்து வியாதியை மேலும் தீவிரமாக்குவதற்கான காரணிகளாக அமைகின்றன.

விகாரம்:ரசாயன கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)

மேலும் தகவல்களுக்கு: Carcinogen
புற்றுநோய் தோன்றும் முறையானது டிஎன்ஏ விகாரங்கள்/ பிறழ்வுகள் ஏற்படுவதாலும் அதனால் கலன் வளர்ச்சி பாதிப்படைந்தும், மெடாச்டாசிஸ் (நோய் இடம் மாறி பரவுதல்) காரணம் நோய் இடம் மாறி பரவுவதாலும் ஏற்படுகின்றன. டிஎன்ஏ விகாரங்களை ஏற்படுத்தும் பொருட்களை முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) என்பர், மேலும் புற்றுநோயை உருவாக்குபவை கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகும். குறிப்பாக சிலபொருட்கள் தனிப்பட்ட சிலவகை புற்றுநோய்களுடன் இணைந்து காணப்படுகின்றன. புகையிலை புகைபிடிப்பது பலவகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது,[7] மற்றும் 90% நுரையீரல் புற்றுநோய் [8] க்கு காரணி ஆகும். நீண்ட காலங்களுக்கு அச்பெச்டாஸ் நார்களுடன் இடர் காப்பின்மை காரணம் மீசொதேலியோமா (இடைத்தோலியப்புற்று)[9] என்ற புற்றுநோய்க்கு உள்ளாகலாம்.
பல முடாஜென்ஸ் (மரபணு சடுதி மாற்றக்காரணிகள்) கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்)ஆகவும் இருக்கிறது, ஆனால் சில புற்று ஊக்கிகள் மரபணு சடுதி மாற்றக்காரணிகள் அல்ல. சாராயம் / மது ஒரு ரசாயன புற்று ஊக்கியாகும் ஆனால் மரபணு சடுதி மாற்றக்காரணி அல்ல.[10] இது போன்ற வேதியியல் பொருள்கள் களப்பகுப்பினை விரைவடைய செய்து புற்றுநோயை தூண்டுகிறது. மிக விரைவான தன்-பகற்சி ஏற்படுகையில், பாதிப்படைந்த டிஎன்ஏ தன்பிரதி அமைத்தலினை கட்டுப்படுத்துவதற்காக செலுத்திய நொதிகள் (என்சைம்கள்) செயலிழந்து விடுகின்றன, அதனால் பிறழ்வுகள் மேலும் விரைவுபடுகின்றன.

நுரையீரல் புற்று நோய் நிகழ்வு ஆனது புகை பிடிப்பிற்கு தொடர்புடையது மூலம்:என் ஐ எச்.
பத்தாண்டுகளாக நீடிக்கும் ஆராய்ச்சி, புகையிலை பயன் பாட்டையும் புற்றுநோய்க்குண்டான தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளது, அது நுரையீரல், குரல்வளை, தலை, கழுத்து, வயிறு, நீர்ப்பை, சிறுநீரகம், உண்குழல், கணையம் ஆகியவற்றை பாதிக்கிறது.[11] புகையிலை புகையில் ஐம்பதுக்கும் மேலான நன்கறிந்த (கார்சினொஜென்ஸ்) புற்று ஊக்கிகள் உள்ளன, அவற்றில் நைற்றசமைன்கள் மற்றும் polycyclic aromatic hydrocarbonபலவட்ட கற்றைகள் கொண்ட நறுமணஹைட்ரோகார்பன்கள் சேரும்.[12] புகையிலை மேம்பாட்டு அடைந்த நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு இறப்பிற்கு காரணமாக திகழ்கிறது,[7] மேலும் உலக அளவில் ஐந்தில் ஒருவர் அதனால் இறக்கின்றனர்.[12] உண்மை கூறுவதானால், அமெரிக்காவில் நுரையீரல் புற்றுநோய் காரணமான இறப்பு விகிதம் புகைபிடிப்போரின் பாங்கினை பொறுத்தே இருந்து வருகிறது, அதிகமாக புகைபிடிப்போர் இருந்தபோது, நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதம் மிகையாகவும் மேலும், தற்போது, புகை பிடிப்போரின் எண்ணிக்கைக்குறைவுடன் நுரையீரல் புற்றுநோய் காரணம் இறந்த மனிதர்களின் விகிதம் குறைவாகவும் காணப்படுகிறது. எனினும், புகைபிடிப்போரின் எண்ணிக்கை உலக அளவில் வளர்ந்து கொண்டே வருகிறது, இதனால் சில நிறுவனங்கள் புகையிலை தொற்றுநோய் ,[13] ஏற்படலாம் என்று அறிவுருத்தி வருகின்றனர்.

பிறழ்வுகள் : அயனாக்கற்கதிர்ப்பு

அயனாக்கற்கதிர்ப்பு உருவாகும் மூல இடங்கள் கூட, அதாவது ரேடான் வாயுவைப் போல, புற்றுநோயை ஏற்படுத்தும். சூரியனின் புற ஊதா கதிர்வீச்சிற்கு மிகையான நேரம் வெளிப்பட்டிருந்தால், அது மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) மற்றும் இதர சருமம் சார்ந்த புற்றுநோய்களுக்கு வகைவகுக்கும்.[14]
மொபைல் தொலைபேசி மற்றும் இதர கருவிகளில் இருந்து வரும் அயனாக்காத வானொலி அலை வெண்கதிர்வீச்சு கூட, புற்றுநோயை ஏற்படுத்தும் என்று கூறுவர், ஆனால் அதற்கான சரியான ஆதாரம் இல்லை.[15] இருந்தாலும், சில வல்லுனர்கள் முன்னெச்சரிக்கை கொள்கை[16] யை கருத்தில் கொண்டு அதிக நேரத்திற்கு வெளிப்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதிநுண்ணுயிரால் அல்லது நுண்ணுயிரால் கிருமித் தொற்று.

சில புற்றுநோய்கள் நோய்க்கிருமிகளுடன் தொடர்பு கொள்வதால் கிருமித்தொற்று ஏற்படலாம்.[17] பல புற்றுநோய்கள் அதிநுண்ணுயிரால் கிருமித்தொற்று மூலம் ஏற்படுவது; இது விலங்குகளைப் பொறுத்தவரை உண்மை, பறவை களுக்கு மட்டும் விதிவிலக்கு, ஆனால் மனிதர்களுக்கும் உண்மையாகும், ஏனென்றால் உலகில் 15% மனித இன புற்றுநோய்களுக்கு, அதிநுண்ணுயிரே காரணம். மனித இனத்திற்கு புற்றுநோய் விளைவிக்கும் முக்கிய அதி நுண்ணுயிர்கள் மனித பாப்பிலோமா நச்சுயிரி, ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் C அதிநுண்ணுயிரிகள், எப்ச்டேஇன்-பர்ர் அதிநுண்ணுயிரி , மனித T-லிம்போற்றோபிக் அதிநுண்ணுயிரி ஆகியவை ஆகும். சோதனையுடன் நோய் விபரவியல் தரவை ஆராய்வினால் அதினுண்ணியிரிகளின் புற்றுநோய்க் காரணிக்கான பங்கு தெரியவருகிறது மேலும் புகையிலைப்பயன்பாட்டுக்குப் பின் மனிதரில் புற்றுநோயைப் பரப்புவதற்கு இரண்டாம் இடம் வகிப்பதற்கு அவையே காரணம்.[18] அதிநுண்ணுயிரிகள் மூலம் தூண்டுதலுக்குள்ளான ட்யுமர்ஸ் (கட்டிகள்) இருவகைகளை சாரும், கடுமையாக-உருமாறுபவை அல்லது மெதுவாக-உருமாறுபவை. கடுமையாக-உருமாறுபவையான அதிநுண்ணுயிரிகள், மிகையாகவும் விரைவாகவும் செயல் புரியும் தன்மை படைத்தவை, வைரல்-ஒன்கொஜனி என்றழைக்கப்படுபவை (v-onc), அத்துடன் பாதிப்படைந்த கலன் v-onc யுடன் தொடர்பு கொண்டதும் உருமாற்றம் அடைந்துவிடுகிறது. அதற்கு எதிர்மறையாக, மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகள், அதிநுண்ணுயிரி ஜெனோம் ஆனது தங்க இடம் அளிக்கும் ஜெநோமில் ஒரு ப்ரோடோ ஒன்கோஜினை நுழைக்கிறது. அதி நுண்ணுயிரி மேம்படுத்துனர் அல்லது இதர படியெடுத்தல் கட்டுப்பாட்டு தனிமங்கள் அப்போது அந்த ப்ரோடோ ஒன்கோஜீனிடம் மிகை வெளிப்பாடு செய்து விடுகின்றன. இதனால் கட்டுப்பாடில்லாத கலப்பகுப்பு ஏற்படுகிறது. அதிநுண்ணுயிரிகளை நுழைப்பதற்கான இடம் தனிப்பட்டதாக இல்லாததால், ஒரு ப்ரோடோ-ஓன்கோஜீனுக்கு (முன்னோடி-புற்றணுக்களுக்கு) அருகே நுழைப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும், அதனால் மிகையாக உருமாறும் அதி நுண்ணுயிரிகளை விட மெதுவாக உருமாறும் அதிநுண்ணுயிரிகளில் மிகவும் தாமதித்தே கிருமித்தொற்று இடங்களில் ட்யுமர்ஸ் (கட்டிகள்) உருவாகும்.
ஹெபடைடிஸ் அதிநுண்ணுயிரிகள், அதில் ஹெபடைடிஸ் B மற்றும் ஹெபடைடிஸ் Cயும் சேரும், ஒரு நீடித்த அதிநுண்ணுயிரி கிருமித்தோற்றத்தை ஏற்படுத்துவதால் அதனால் ஹெபடைடிஸ் B நோயாளிகளுக்கு, கல்லீரல் புற்றுநோய் 0.47% அளவுக்கு ஆண்டொன்றில் விளைகிறது (குறிப்பாக ஆசியாவில், வட அமெரிக்காவில் குறைவாகவும்), மேலும் ஹெபடைடிஸ் C நோயாளிகளுக்கு அது 1.4% அளவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தென்படுகிறது. ஈரல் கரணைநோய், ஹெபடைடிஸ் நோய் காரணமோ, அல்லது குடிப்பதனாலோ வந்தாலும், கல்லீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகும். இரு நோய்களும் கலந்திருந்தால், அதனால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. வைரல் ஹெபடிடிஸ் பரவுதல் மேலும் நோய்வாய்ப்படுதல் போன்றவற்றின் பெரிய சுமைகளால், உலக அளவில், கல்லீரல் புற்றுநோய் என்பது மிகவும் பொதுவான, மிகவும் பயங்கரமான புற்றுநோயாகத் திகழ்கிறது.
புற்றுநோய் ஆராய்ச்சியில் நிகழ்ந்து வரும் முன்னேற்றம் காரணம் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
2006 ஆம் ஆண்டில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஒரு மனித பாபில்லோமா வைரஸ் கொண்ட தடுப்பூசியான கர்டாசில் என்பதைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இத்தடுப்பூசியானது நான்கு விதமான எச்பிவி வகையிலான புற்று நோயை கட்டுப்படுத்தும், அவை நாலும் சேர்ந்து 70% கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் 90% இன உறுப்பு சார்ந்த மறுக்களுக்கும் காரணியாகும். மார்ச் 2007 அன்று, அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) அட்வைசரி கம்மிட்டீ ஒன் இம்முனைசேஷன் ப்ராக்டிசெஸ் (ஏசிஐபி ) அதிகாரபூர்வமாக 11–12 வயதுள்ள பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது, மேலும் 9 முதல் 26 வயது ஆனவர்கள் கூட இதை பயன்படுத்த ஊக்குவித்தது.
அதிநுண்ணுயிரிகள் அல்லாமல், பாக்டீரியா மற்றும் சில புற்றுநோய்களுக்கும் இடையே உள்ள இணைப்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதில் மிக முக்கியமான எடுத்துக்காட்டு, வயிற்றுச்சுவரில் ஏற்படும் நீண்ட நாள் பாதிப்பிற்கும், ஹெளிகோபாக்டேர் பைலோரி மற்றும் இரையக புற்றுநோய் இடையே உள்ள உறவு.[19][20] ஹெளிகோபாக்டேரா ல் பாதிப்படைந்த சிலரே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றாலும், இந்த நுண்ணுயிரி பொதுவானதாக இருப்பதால், இது போன்ற புற்றுநோய் வருவதற்கு அவையே காரணமாக இருக்கலாம்.[21]

இயக்குநீர் நொதி சமசீரின்மை

சில நொதிகள் உரு மாற்றம் அடையா கார்சினொஜென்ஸ் (புற்று ஊக்கிகள்) போலவே செயல்படுகின்றன, ஏன் என்றால் அவை மிகையான கலன்களின் வளர்ச்சிக்கு காரணம் ஆகின்றன. இதற்கான நன்கு நிரூபித்த எடுத்துக்காட்டு ஹைபெரேச்ற்றோஜெனிக் (மிகையான எஸ்ட்ரோஜென் வெளிப்பாடு) நிலைமைகளின் பங்கும் என்டோமேற்றியல் (கருப்பையகம் சார்ந்த) புற்றுநோய் பாதிப்படைவதற்கான தொடர்பும்.

நோய் எதிர்ப்பு மண்டல செயல் பிறழ்ச்சி

எச்ஐவி ஆனது பல புற்றுநம் பரவுவதற்கான இடர்பாடுகளுடன் தொடர்புள்ளது, அவற்றில் காபோசியின் சர்கோமா (சதைப்புற்று), நான்-ஹோட்க்கின்னான லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மற்றும் எச்பிவி-சார்ந்த புற்றுநம் பரவுதல் எ.கா.குத புற்றுநோய் மற்றும் கழுத்துப்பட்டை புற்றுநோய். எயிட்ஸ்-நோயை விளக்கும் கூறுகள் வெகு நாட்களாக இவ்வாறான கண்டறிதலை ஏற்றுக்கொண்டுள்ளன. எச்ஐவி நோயாளிகளிடம் தோன்றும் மிகையான புற்றுநம் பரவுதலுக்கான நிகழ்வு எதை சுட்டிக்காட்டுகிறது என்றால் நோய் தடுப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளே, இது புற்றுநோய்க்கும் பொருந்தும்.[22] மேலும் சில இதர நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு நிலைமைகள் (எ.கா. பொதுவான மாறுபடும் நோய்த்தடுப்புக்குறை மற்றும் ஐஜிஏ குறைவு ) இவையும் மிகையான அளவில் புற்றுநம் பரவுதலுக்கு காரணமாகலாம்.[23]

மரபு வழி

புற்றுநோயின் மிக்க வகைகள் தொடர்ச்சியற்றவை ஆகும், அதாவது அது மரபுசார்ந்ததாக தெரியவில்லை. எனினும், நன்றாக கண்டறிந்த பல நோய்க் குறித்தொகுப்புகள் உள்ளன, மரபுசார்ந்த புற்றுநோய் வருவதற்கு, மிக்கவாறும் ஒரு உயிரணுவில் உள்ள குறை காரணமாக அது ட்யுமர் (கட்டி) உண்டாகவிடாமல் தடுக்கும் தன்மையை இழந்திருக்கலாம். புகழ் பெற்ற எடுத்துக் காட்டுக்கள்:

இதர காரணங்கள்

கருவுற்றிருக்கும் போது சில அரிய பரப்புதல் ஏற்பட்டிருந்தாலும் அல்லது உறுப்புகள் தானம் செய்யும் போது குறைவாக சிலதும் நிகழ்ந்திருந்தாலும், பொதுவாக புற்றுநோய் ஒரு தொற்றிக்கொள்ளும் நோயல்ல. இந்த திசு ஒட்டுமை நிராகரிப்புக்கு முக்கிய காரணம் MHC ஒவ்வாமையாகும் .[24] மனிதரில் மற்றும் இதர முதுகெலும்பு விலங்குகளுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலம் MHC உடற்காப்பு ஊக்கிகளை "தன்" மற்றும் "தனது-அல்லாத" உயிரணுக்களை வேறுபடுத்த பயன்படுத்துகின்றன, ஏன் என்றால் இவ்வகை உடற்காப்பு ஊக்கிகள் மனிதனுக்கு மனிதன் வேறுபட்டிருக்கும். தனது-அல்லாத உடற்காப்பு ஊக்கிகளை எதிர்கொள்ளும் பொது, நோய் எதிர்ப்பு மண்டலம் அதற்கு ஒப்பான உயிரணுக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகள் கட்டியின் உயிரணுக்களை தவிர்த்து கட்டி ஒட்டாமல் இருக்குமாறு எதிராக செயல்பட்டு காக்கின்றன. அமெரிக்காவில், ஆண்டு தோறும் சுமார் 3,500 கர்பிணிகள் புற்றுப் பிறழ்வுகளால் அவதியுறுகின்றனர், மற்றும் மாறுபக்க கருக்குடை பரப்புதல் காரணம் கடின லுக்கேமியா (வெண்செல்லிரத்தம்) , லிம்போமா (நிணநீர் திசுக்கட்டி), மெலனோமா மற்றும் கார்சினோமா (புற்றுநோய்) தாயிடம் இருந்து கருவிற்கு மாறுவது கண்காணிக்கப்பட்டுள்ளது.[24] உறுப்பு தானம் செய்தவர்களிடம் இருந்து கட்டிகள் மேம்படுவது என்பது மிகவும் அரிதாகும். மாற்று உறுப்பு பொருத்தல் விளைவாக கட்டி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் புற்றுப்பண்பு மெலனோமாவாக (கருங்கட்டி; கறும்புத்து) இருக்கலாம், அதை உறுப்பை பெறும் வேளையில் பார்க்காமல் விட்டுவிட்டதே காரணம்,[25], எனினும் இதர காரணங்களும் இருக்கிறது.[26]. உண்மையில், ஒரு உயிரினத்திலிருந்து, அதே வகையிலான இன்னொரு உயிரினத்திற்கு புற்றுநோய் தாக்குவதற்கு, இரு வகையினருக்கும் ஒரே போன்ற இழையமாக்கிப்பொருத்தம் கொண்ட உயிரணுக்களாக இருக்க வேண்டும் [27], இது எலிகளை வைத்து நிரூபணமாகி உள்ளது; எனினும் அது அப்படி நிஜ உலகத்தில் நடக்காது, மேற்கூறிய எடுத்துக்காட்டினைத் தவிர.
மனித இனம் அல்லாதோரிடம், ட்யுமர் (கட்டி) உயிரணுக்கள் அவர்களுக்குள்ளாகவே பகர்ந்து கொண்டதால், சில வகையிலான புற்றுநோய் அவைகளை பாதிப்பதாக கண்டுள்ளது. இந்த நிகழ்வு, நாய்களில் ச்டிச்கேர்ஸ் சர்கோமா (சதைப்புற்று) உள்ள நாய்களில் தென்படுகிறது, இதை கநைன் ட்றன்ச்மிச்சிபில் வேநேரியல் கட்டி [28] என்று அழைப்பர், மேலும் டெவில் பேசியல் ட்யுமர் நோய் என்று டாச்மேனியன் டெவில்களிலுள்ளது..

இயங்குமுறை


தொடர்ந்து ஏற்படும் பிரழ்வுகளினால் புற்றுநோய் வருகிறது. ஓவ்வொரு பிழற்வும் அணுவின் இயல்பை மாற்றியமைக்கிறது
புற்றுநோயானது திசு வளர்ச்சிக்கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஒரு சாதாரண உயிரணுவில் இருந்து, புற்றுநோய் உயிரணுவாக மாற்றம் அடைவதற்கு, திசு வளர்ச்சியை கட்டுப்படுத்தும் மற்றும் வேறுபடுத்தும் மரபணுக்கள் திருத்தியமைத்திடவேண்டும்.[29] மரபியல் மாறுபாடுகள் பல மட்டங்களில் நிகழலாம், ஒற்றை DNA நியூக்ளியோட்டைடி னை பாதிக்கும் ஒரு பிறழ்வால், அனைத்து நிறமிகளை பெறுதலோ அல்லது இழக்கலோ நேரலாம். இரு அகன்ற வகையிலான மரபணுக்கள் இந்த மாறுபாடுகளால் பாதிப்படைகின்றன. புற்றணுக்கள் பொதுவான மரபணுக்களாக இருந்து அதற்கு ஏற்றதாக இல்லாத உயர்ந்த மட்டங்களில் வெளிப்படுத்தலாம், அல்லது புதுமையான இயல்புகள் கொண்ட திருத்தியமைத்த மரபணுக்களாக மாறியிருக்கலாம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இத்தகைய மரபணுக்கள் வெளிப்படுத்தும் தன்மையானது, புற்றுப்பண்பு வெளித்தோற்ற அமைப்பு கொண்ட புற்றுநோய் உயிரணுக்கள் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் ஆனவை மரபணுக்கள் ஆகும், அவை புற்றுநோய் உயிரணுக்களின் கலப்பிரிவு, உயிரணு பகுப்பு, உயிர்பிழைத்தல், அல்லது இதர இயல்புகளை தடுத்து நிறுத்துபவையாகும். கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளை அடிக்கடி புற்றுநோயை ஊக்குவிக்கும் மரபியல் மாறுபாடுகள் செயலிழக்கச்செய்யும். உரு மாதிரியான, ஒரு பொதுவான உயிரணுவினை புற்றுநோய் உயிரணுவாக மாற்ற பல மரபணுக்களில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.[30]
புற்றுநோய் உயிரணுக்களை உருவாக்குவதற்கு பங்களிக்கும் வெவ்வேறு மரபணு மாற்றங்களுக்கும் பலவகை வகைப்பாடு திட்டங்கள் உள்ளன. இதிலுள்ள பல மாற்றங்கள் பிறழ்வுகள் ஆகும், அல்லது ஜெநோமிக் DNA நியூக்ளியோட்டைடுவரிசை முறையில் மாற்றங்கள். அனுப்பிளாய்டி (நிறைவில்லாத நிறத்திரிப்பெருக்கம்), அவற்றில் மிகையான எண்களில் நிறமிகள் காணப்படும், இந்த மரபணு மாற்றம் ஒரு பிறழ்வு அல்ல, மற்றும் இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறமிகள் பெறவோ, இழக்கவோ நேரிடலாம், உயிரணுப் பிளவு மூலம் பிழைகள் ஏற்படுவதால்.
பெரிய அளவிலான பிறழ்வுகளில், ஒரு நிறமியின் பாகத்தை நீக்கவோ அல்லது பேறவோ நேரிடும். ஒரு உயிரணு / கலன் ஆனது சொற்ப நிறமூர்த்த உடலில் இடம் கிடைத்து அதன் பலநகல்களை (20 அல்லது அதற்கும் மேலே) பேறும் பொது, வழக்கமாக ஒன்று அல்லது அதற்கும் மேலான புற்றணுக்கள் மற்றும் அருகாமையில் உள்ள கலப்பொருட்களை கொண்டதாக, ஜெநோமிக் பெருக்கம் நிகழும். ஒரு இயல்பாய்வு வாய்ந்த இடத்தில், இரு வேறுபட்ட நிறுமி வட்டாரங்கள் நியதிக்கு மாறாக அடிக்கடி உருகி சேர்ந்தால், அப்போது இடமாற்றம் நிகழ்கிறது. சிறந்த எடுத்துக்காட்டானது பிலடெல்பியா நிறமி, அல்லது நிறமிகள் 9 மற்றும் 22 டின் இடமாற்றம், நாட்பட்ட மயிலோஜெனஸ் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) நிகழ்வது, மற்றும் அதனால் BCR-எபிஎல் கலந்திணைப்பு புரதம், உற்பத்தி ஆகிறது, அது ஒரு ஒன்கோஜெனிக் டைரோசின் கினேசாகும்.
சிறிய அளவிலான பிறழ்வுகளில் புள்ளி பிறழ்வுகள், நீக்கங்கள், மற்றும் புகுத்தல், அவை உயிரணு மேம்படுத்துனரில் நிகழும் மற்றும் அதன் முகத் தோற்றத்தை பாதிக்கும், அல்லது அவை உயிரணுவின் குறியீடு வரிசை முறையை பாதித்து மற்றும் அதனுடைய புரதம் உற்பத்திப்பொருளின் செயல்பாடு அல்லது அதன் நிலைப்புத்தன்மையை மாற்றலாம். டிஎன்ஏ வைரஸ் அல்லது (2)ரேற்றோவைரஸ் (திரும்பும் நோய்க்கிருமி)(/2)களில் இருந்து கலப்பொருளை தொகுப்பும் போது ஒரு உயிரணுவில் பகிர்வு ஏற்படலாம் மற்றும் இப்படியான நிகழ்ச்சி வைரல் புற்றணுக்களை பாதிப்படைந்த உயிரணுவில் மற்றும் அதன் உடன்பிறப்புகளில் வெளிப்படுத்தலாம்.

எபிஜெநேடிக்ஸ் (அதிசனனவியல்)

அதிசனனவியல் என்பது உயிரணு வெளிப்பாடுகளை வேதிப் பொருள் மூலமாக, டிஎன்ஏ கட்டமைப்பில் பிறழ்வு இல்லாமல் கட்டுப்படுத்தும் முறையை படித்து அறிந்து கொள்வதே ஆகும். புற்றுநோய் தோன்றும் முறையை அறிந்து கொள்ள அதிசனனவியல் கோட்பாடு ஆனது டிஎன்ஏ வில் பிறழ்வு இல்லா மாற்றங்களால் உயிரணு வெளிப்பாடுகளிலும் திருத்தவோ, மாற்றி அமைக்கவோ செய்யலாம். பொதுவாக, புற்றணுக்கள் உமிழ்நீர்ச் சுரப்பிக் கல் (sialogen) கொண்டதாக இருக்கும், எடுத்துக்காட்டு,டிஎன்ஏ மெதயிலேற்றம் காரணம். அந்த மெதயிலேற்றம் இழந்துவிட்டால், அது புற்றணுக்களில் பிறழும் வெளிப்பாட்டை தூண்டலாம், அது புற்றுநோய் தோன்றும் முறைக்கு கொண்டுசெல்லலாம். அதிசனனவியல் மாற்றங்களில் தெரிந்த இயங்குமுறைகள் ஆனவை டிஎன்ஏ மெதயிலேற்றம், மற்றும் மெதயிலேற்றம் அல்லது அசெடைலேஷன் ஒப் ஹிச்டோன் புரதங்கள். குறிப்பிட்ட இடங்களில் அது நிறமூர்த்த டிஎன்ஏ வினை கட்டுப்படுத்தி / கட்டிவைத்திருக்கும்.
எச்டிஏசி மட்டுப்படுத்திகள் மற்றும் டிஎன்ஏ மேதில்ற்றான்ச்பிறேஸ் மட்டுப்படுத்திகள், போன்ற வகுப்பை சார்ந்த மருந்துகளால், அதிசனனவியல் சார்ந்த சைகைகளை திரும்பவும் புற்றணு கலத்தில் ஒழுங்குபடுத்த இயலும்.

புற்றணுக்கள்

புற்றணுக்கள் கலன் வளர்ச்சியை பல வகையான வழிகளில் மேம்படுத்துகிறது. அவற்றுள் பல நோதிக ளை உருவாக்குகின்றன, அவை உயிரணுக்களுக்கிடையே ஒரு "வேதிப் பொருள் தூதுவர்கள்" ஆக செயல்பட்டு உயிரணு பிளவு ஏற்படுகிறது, அதன் பாதிப்பு அதைப்பெறும் திசு அல்லது உயிரணுக்களின் சைகை குறுக்குக் கடத்துகையைப் பொறுத்து இருக்கும். அதாவது, எப்பொழுது வாங்கும் கலனில் இருக்கும் ஒரு நோதிவாங்கி தூண்டப்படுகிறதோ, கலனின் மேற்பரப்பில் இருந்து இந்த சைகை கலன் உயிரணுக்கருவிடம் அடைந்து, உயிரணுக்கரு மட்டத்தில் மரபணு படியெடுத்தல் விதிகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில புற்றணுக்கள் சைகை குறுக்குக் கடத்துகை முறைமையின் பாகமாகவே விளங்குகின்றன, அதுவாகவே, அல்லது உயிரணுக்கள் மற்றும் திசுக்களில் அவர்களே சைகை வாங்கிகளாக செயல்படுகின்றனர், இவ்வாறு நோதிகளின் உணர்திறனை கட்டுப்படுத்துகின்றனர். புற்றணுக்கள் அடிக்கடி இழைப்பிறப்பாக்கக் கலன் களை , உருவாக்குகின்றன அல்லது அவை டிஎன்ஏ வின் படியெடுத்தலை உருவாக்க புரதம் செயற்க்கைத் தயாரிப்பு, மூலம் புரதம் மற்றும் நோதி களை தயாரிக்கின்றனர், அவை உயிரணுக்கள் பயன்படுத்தும் மற்றும் இடைவினைபுரியும் உற்பத்திப்பொருட்கள் மற்றும் உயிரிரசாயனங்களை தயாரிக்கின்றது.
முன்னோடி-புற்றணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள், அவை பொதுவான புற்றணுக்க ளுடைய அமைதியான எதிர்ப்பிரதி ஆகும், அவற்றின் வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளை உருமாற்றி, உற்பத்திப்பொருளான புரதத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது. இவ்வாறு நடக்கும்போது, முன்னோடி-புற்றணுக்கள் புற்றணுக்கள் ஆக மாறுகின்றன, மேலும் இந்த மாற்றம் உயிரணு சக்கிர த்தின் கலனில் பொதுவான சமன்படுத்தும் கட்டுப்பாட்டினை சலனமடையச்செய்கிறது, இதனால் கட்டுப்பாடில்லா வளர்ச்சி ஏற்படுகிறது. முன்னோடி-புற்றணுக்கள் ஜினோமில் இருந்து அகற்றுவதால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்க முடியாது, அப்படி இயன்றாலும், அவை உயிரினத்தின் வளர்ச்சி, திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் சீரான உடல்நிலை களைப்பேண இக்கட்டாகும். அவற்றில் பிறழ்வு ஏற்படும் போது தான் வளர்சிக்கான சைகைகள் மிகைப்படுகின்றன.
புற்றுநோய் ஆராய்ச்சியில் முதல் முதலாக வரையறுக்கப்பெற்றது புற்றணுக்கள் ராச புற்றணு ஆகும். ராச குடும்பத்தின் முன்னோடி-புற்றணுக்க ளில் பிறழ்வுகள் (எச்-ராச, என்-ராச மற்றும் கே-ராச கொண்ட) மிகவும் பொதுவானவை ஆகும், அவை 20% முதல் 30% வரையில் அனைத்து மனித இன கட்டிகளில் காணலாம்.[31] அசலாக ராச என்பதை ஹார்வேய் சர்கோமா (சதைப்புற்று) தீநுண்ம் ஜினோமில் அடையாளம் கண்டு பிடித்தது, மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதனை மனித ஜினோமில் இருப்பதோடல்லாமல், ஒரு தூண்ட வைக்கும் கட்டுப்பாடு தனிமத்தைக்கொண்டு முடிச்சிடும் போது, கலன் நேரியல் பண்பாட்டிலும் புற்றுநோயை தூண்ட வல்லதாக இருந்தது அவர்களுக்கு எதிர்பாராதது.[32]

கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள்

கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் எதிர் இனப்பெருக்கம் செய்வதற்கான சைகைகளை நிரற்றொடர் செய்து மேலும் புரதங்கள் உயிரணுபிளவு படுவதையும் கலன் வளர்ச்சியையும் கட்டி அடக்கிப்பரம்பரையலகு அடக்கும். பொதுவாக, கட்டி அடக்கிபரம்பரையலகுகள் ஆனவை படியெடுத்தல் காரணி கள் ஆகும், அவை உயிரணு உளைச்சல் அல்லது டிஎன்ஏ சேதம் அடைவதால் முடுக்கிவிடப்படுகின்றன. அடிக்கடி டிஎன்ஏ சேதம் ஏற்பட, தலையற்ற மிதக்கும் பாரம்பரியப்பொருள்கள் அதில் அடங்கி்யிருக்கும் மேலும் இதர சைகைகளுடன் இருக்கும், அவை நொதிகளையும் பாதைகளையும் தூண்டி விடுவதனால் கட்டி அடக்கிப்பரம்பரையலகுகள் கிளர்வடைந்து செயல்படும். இதுபோன்ற உயிரணுக்களின் செயல்பாடு ஆனது உயிரணு சக்கிரத்தின் முன்னேற்றத்தை தடுப்பதோடு டிஎன்ஏ வின் திருத்தங்களை மேற்கொள்ளும், அதன் மூலம் பிறழ்வுகள் பரவி மகள் உயிரணுக்களுக்கு கடந்துசெல்வதைத் தடுக்கும். p53 புரதமானது, மிகவும் முக்கியமாக ஆராய்ந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் ஒன்று, அது ஓர் படியெடுத்தல் காரணி, அது பல கிளர்வுற்ற கலன்களால் ஊக்கம் பெறும் எடுத்துக்காட்டாக ஹைபோக்சியா (உயிர்வளிக்குறை) மற்றும் புற ஊதாக்கதிர்வீச்சு சேதம்.
அரைப்பகுதிக்கும் மேலான அனைத்து புற்றுநோய் வகைகளிலும் p53 மாற்றங்கள் கொண்டவையாக இருந்தாலும், அதன் கட்டியை அடக்கும் முறையானது சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. p53 க்கு தெளிவாக இரண்டு செயல்பாடுகள் உள்ளன: ஒன்று ஒரு அணுக்கருவாக இருந்து படியெடுத்தல் காரணிகளை பேணுதல், மேலும் மற்றொன்று குழியமுதலுருவுக்குரிய பங்கான உயிரணு சக்கிரத்தை, கலப்பிரிவு, உயிரணு பகுப்பு மற்றும் அபோப்டோசிசை (திட்டமிட்ட செல்மரணம்) கட்டுப்படுத்தல்.
வார்புர்க் கருதுகோள் ஆனது புற்றுநோய் வளர்ச்சியை ஏந்துவதற்காக க்ளைகொளைசிசை விருப்பத்துடன் சக்தி அளிப்பதற்காக பயன்படுத்துதலாகும். p53 ஆனது சுவாசத்துக்குரிய பாதைக்கு பதிலாக க்ளைகொளைடிக் பாதையை கட்டுப்படுத்த இயலும் என்பதை தெளிவுப்டுத்தி உள்ளது.[33]
எனினும், ஒரு பிறழ்வு நடந்தால் கூட, அது அந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகையே சேதப்படுத்தலாம், அல்லது அதனை செயல்படுத்தும் சைகைப்பாதையை, "அணைத்து விடலாம்". இதன் பரிணாமம் என்ன என்றால் டிஎன்ஏ வினை திருத்துவது என்பது தடைபட்டும், அல்லது அடக்கப்பபட்டும் இருப்பதே: டிஎன்ஏ சேதம் திருத்தப்படாமல் மேலும் கூடுகிறது, முடிவில் அது புற்றுநோய்க்கு கொண்டுபோய் விடுகிறது.
கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் உள்ள கருச்செல் கோடின் உயிரணுக்களுக்கு ஏற்படும் பிறழ்வுகள், அதன் குஞ்சுகளுக்கு போய் சேர்வதால், அதனால் பின்வரும் தலைமுறைகளுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு கூடிவரும். இந்த குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களுக்கு இதற்கான நிகழ்வு அதிகரித்தும் மேலும் பன்மடங்கான கட்டிகளுக்கு குறைந்த மறைநிலையும் காணப்படும். ஒவ்வொரு வகையான அடக்கிப்பரம்பரையலகு பிறழ்விற்கும், கட்டிகளின் வகை தனிப்படும், அதில் சில பிறழ்வுகள் குறிப்பிட்ட புற்றுநோயையும், மற்றும் இதர பிறழ்வுகள் இதர வகைகளையும் சாரும். மரபுப்பிறழ்ந்த கட்டி அடக்கிகளின் மரபுரிமையாய் பெறும் விதமானது ஒரு பாதிப்படைந்த உறுப்பினர் ஒரு பெற்றோரிடம் இருந்து குறையுள்ள நகலையும் மற்றும் இன்னொரு பெற்றோரிடம் இருந்து பொதுவான நகலையும் மரபுரிமையாக பெறுகிறது. எடுத்துக்காட்டாக, தனிநபர் யார் ஒருவர் மரபுரிமையாக ஒரு மரபுப்பிறழ்ந்த p53 எதிருரு (மேலும் அதனால் பிறழ்வுற்ற p53 க்கு வற்றுப்புணரிய தன்மை) கொண்டவர்கள் கருங்கட்டிகள்; கணையச்சிரை புற்றுநோய் போன்றவற்றால் பாதிப்படையலாம், இது லி-பிராவமேனி நோய்க் குறித்தொகுப்பு என அறி்யப்படும். இதர மரபுரிமையாக கட்டி அடக்கிப்பரம்பரையலகு நோய்க்குறித்தொகுப்புகளில் (Rb)ரப் பிறழ்வுகள், இரெத்தினோபிளாசுத்தோமாவுடன் தொடர்புடையது, ஏபிசி உயிரணி பிறழ்வுகள்,அடிநோவிழுதியப் பெருங்குடல் புற்றுநோயுடன் தொடர்புடையது ஆகியவை அடங்கும். அடிநோவிழுதியப் பெருங்குடல் புற்றுநோய் இளமையாக இருக்கையில் பெருங்குடலில் ஆயிரக்கணக்கான பவளமொட்டுக்களுடன் தொடர்புடையது, அவை சின்ன வயதிலேயே பெருங்குடல் புற்றுநோய்க்கு வழி வகுக்கும். இறுதியாக,BRCA1 மற்றும் BRCA2 வில் ஏற்படும் மரபுரிமை பிறழ்வுகள் விரைவாக மார்பக புற்றுநோய் தொடக்கத்திற்கு வித்திடும்.
1971 ஆம் ஆண்டில் புற்றுநோய் குறைந்தது இரு பிறழ்வு நிகழ்வுகளை சார்ந்திருப்பதாக முன்மொழிந்தார்கள்.நட்சனின் டு-ஹிட் கருதுகோள் என அறியப்படுவது, கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளில் இருக்கும் ஒரு மரபுவழி, ஜெர்ம்-லைன் பிறழ்வு அந்த உயிரினத்தின் வாழ்வில் இன்னொரு பிறழ்வு ஏற்பட்டால், அந்த கட்டி அடக்கிப்பரம்பரையலகில் இருக்கும் இதர எதிருருவை செயலிழக்கச்செய்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பதே.[34]
பொதுவாக, புற்றணுவானது அடக்கி ஆளும் பண்புடையது, ஏனென்றால் அவற்றில் பேறு-செயல்பாடு பிறழ்வுகள் உள்ளன, ஆனால் பிறழ்வுக்குள்ளான கட்டி அடக்கிப்பரம்பரையலகுகளானது அடக்கமானவை, ஏனென்றால் அவற்றில் இழப்பு-செயல்பாடு பிறழ்வுகள் உள்ளன. ஒவ்வொரு உயிரணுவிலும் அதே மரபணுவின் இரு நகல்களை கொண்டது, ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று, மற்றும் மிகையான நிகழ்வுகளில் பேறு-செயல்பாடு பிறழ்வுகள் ஒரு மூல-புற்றணுவின் நகலில் இருந்தால் அதுவே ஒரு உண்மையான புற்றணுவாகிறது. ஆனால்,இழப்பு-செயல்பாடு பிறழ்வுகள் கட்டி அடக்கிப்பரம்பரையலகின் இரு நகல்களிலும் இருந்தாலே ஒழிய அந்த மரபணு முழுமையாக செயலிழக்காது. ஆனாலும், கட்டி அடக்கிப்பரம்பரையலகின் ஒரு பிறழ்வுபட்ட நகலானது தனது காட்டுத்தனமான-ரகத்தை சார்ந்த நகலை செயலிழக்கச்செய்கிறது. இந்த தோற்றப்பாட்டை அடக்கி ஆளும் பண்புடைய எதிர்மறை தாக்கம் என்றழைப்பர் மற்றும் இதை p53 பிறழ்வுகளில் காணலாம்.
பல ஆராய்ச்சியாளர்கள் நட்சொனின் டூ-ஹிட் மாதிரியை அண்மையில் எதிர்விடுத்துள்ளனர். கட்டி அடக்கிப்பரம்பரையலகின் ஒரு எதிருருவை செயலிழக்கச் செய்தாலே கட்டிகள் ஏற்படும். இந்த தோற்றப்பாட்டை ஒருமடிபற்றாகுறை என்று அழைப்பர் மற்றும் இதைப்பல சோதனைமுறைகளில் பறைசாற்றியுள்ளார்கள். ஒருமடிபற்றாகுறையால் ஏற்படும் கட்டிகளை டூ-ஹிட் வழியால் ஏற்படும் கட்டிகளுடன் ஒப்பிட்டால் ஒருமடிபற்றாகுறையால் ஏற்படும் கட்டிகள் பொதுவாக பிற்கால வயதில் தோன்றுகிறது.[35]

புற்றுநோய் உயிரணு உயிரியல்


திசுவினை ஒரு தொடர் அலைமாலையாக சாதாரண வகையில் இருந்து புற்றணு இயல்பு கொண்டது வரை ஒழுங்கு படுத்தலாம்.
அடிக்கடி, புற்றுநோயை ஏற்படுத்தும் பன்மடங்கு மரபியல் மாறுபாடுகள் பல வருடங்களுக்கு பிறகே குவியும். இந்த நேரத்தில், முன்-புற்றுப்பண்பு உயிரணுக்களுடைய உயிரியல் நடத்தையானது மெதுவாக பொதுவான உயிரணுக்களின் பண்புகளில் இருந்து வேறுபட்டு புற்றுநோய் பண்புடையவையாக மாறிவிடுகிறது. முன்-புற்றுப்பண்பு திசுவை உருபெருக்கியில் பார்க்கும் பொழுது, அதற்கு ஒரு தனித்தன்மை பெற்ற தோற்றம் இருப்பதை காணலாம். அதனை வேறுபடுத்தும் பண்புகள் என்ன என்றால் அவை அதிக எண்களில் பிளவு கொண்ட உயிரணுக்கள், அதன் அணுக்கருவின் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபாடு, உயிரணுக்களின் அளவு மற்றும் வடிவத்தில் வேறுபாடு, தனி உயிரணுக்களின் பண்புகளின் இழப்பு, மற்றும் இயல்பான திசு அமைப்பில் ஏற்படும் இழப்பு. இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி என்பது ஒரு நியதிக்கு மாறான மிகையான உயிரணுக்களின் இனப்பெருக்கம் ஆகும், அதனால் இயல்பான திசு அமைப்பு நடக்காமலும் மேலும் முன்-புற்றுப்பண்பு உயிரணுக்களின் கட்டமைப்பின் இழப்பும் நேர்கிறது. இது போன்ற முன்னரே நடைபெற்ற நியோப்பிளாஸ்டிக் மாற்றங்களை மிகைப்பெருக்கத்தில் இருந்து வேறுபடுத்த வேண்டும், அது ஒரு ஆர்மோன் சமசீர்க்கேடு அல்லது நாள்பட்ட உறுத்தல் போன்ற வெளிப்புற தூண்டுதல் காரணமாக ஏற்பட்ட மீளக்கூடிய உயிரணு பகுப்பாகும்.
இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சியின் மிகவும் தீவிரமான நிகழ்வுகளை "கார்சினோமா (புற்றுநோய்) இன் சி்டு" என்று சுட்டியனுப்பப் படுகிறது. லத்தீன் மொழியில், "இன் சி்டு" என்றால் "இந்த இடத்தில்", அதனால் கார்சினோமா(புற்றுநோய்) இன் சி்டு என்பது ஒரு கட்டுப்பாடில்லாத உயிரணுக்களின் வளர்ச்சி அது தோன்றிய இடத்திலேயே நீடிப்பதும் மற்றும் இதர திசுக்களில் பரவாமலும் இருப்பதை சுட்டியனுப்புவதாகும். இருந்தாலும், கார்சினோமா(புற்றுநோய்) இன் சி்டு நாளடைவில் படரும் கொடும் புற்றுநமாகலாம் மற்றும் முடிந்தால் அதை அறுவை சிகிச்சையால் பொதுவாக நீக்கப்படுகிறது.

க்லோனல் (முளை வகை) பரிணாம வளர்ச்சி

விலங்குகளின் எண்ணிக்கையில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவது போல, கட்டுப்பாடில்லாத உயிரணுக்களின் எண்ணிக்கையும் பரிணாம வளர்ச்சியடைகிறது. இந்த விரும்பத்தகாத செயல்பாட்டினை உடலுக்குரிய பரிணாம வளர்ச்சி என அழைக்கிறோம், மேலும் அவ்வகையில் தான் புற்றுநோய் தோன்றுகிறது மற்றும் கொடும்புற்றிநம் ஆகிவிடுகிறது.[36]
உயிரணு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மிக்க மாறுதல்கள் உயிரணுக்களை ஒழுங்கற்ற பாணியில் வளரச்செய்வது, உயிரணுவை இறக்கச்செய்யும்.ஆனால் ஒரு முறை புற்றுநோய் தோன்றினால், புற்றுநோய் உயிரணுக்கள் இயற்கைத்தேர்விற்கு இடையாகும்: புதிய மரபியல் மாறுபாடுகள் கொண்ட குறைவான உயிரணுக்கள் அவர்களின் உயிர் பிழைத்தலை அல்லது இனபெருக்கத்தை அதிகரித்து தொடர்ந்து பெருகி, வளரும் கட்டியை ஆளுகின்றன, மற்றும் குறைந்த மரபியல் மாறுபாடுகள் கொண்ட உயிரணுக்களின் வளர்ச்சியை அடக்குகின்றது.[37] இதனால் தான் நோய்க்கிருமிகளான எம்ஆர்எஸ்ஏ போன்றவை நோய்க்கிருமி கட்டுப்படுத்தி-எதிர்ப்புச்சக்தி கொண்டவை ஆகின்றன (அல்லது எப்படி எச்ஐவீ ஆனது மருந்து-எதிர்ப்புச்சக்தி) கொண்டதாக ஆகிறது, மற்றும் இதே காரணம் பயிர் கருகல் மற்றும் பூச்சிகள் பூச்சிக்கொல்லி-எதிர்ப்புசக்தியுடன் விளங்குகின்றன. இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக புற்றுநோய் மறுபீடிப்பில் உயிரணுக்கள் புற்றுநோய்-மருந்து எதிர்ப்புத்தன்மை பெற்றவையாகவும் (அல்லது சில நிகழ்வுகளில் கதிரியக்கச் சிகிச்சைக்கு எதிர்ப்புத் தன்மை கொண்டவையாக திகழ்கின்றன).

புற்றுநோய் உயிரணுக்களின் உயிரியல் பண்புகள்.


நலமுடைய கலங்கள் சரி செய்ய இயலா நிலைக்குச் சேதம் உற்றால் கலங்கள் தாமே அழியும் தன்மை கொண்டுள்ளதால் (இதனை கலத் தற்கொலை (apoptosis) என்று அழைப்பர்) அவ்வழி சிதைவுற்று நீக்கப்படும். ஆனால் புற்றுநோய் உற்ற கலங்கள், தாமே அழியாமல், கட்டற்ற முறையில் மேலும் மேலும் பிரிந்து பெருகுகின்றது.
2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹநஹன் மற்றும் வெயின்பேர்க் கட்டுரையில், புற்றுப்பண்பு கட்டி உயிரணுக்களின் உயிரியல் பண்புகள் கீழே கண்டபடி சுருக்கியுள்ளனர்:[38]
  • வளர்ச்சி சைகைகளை கையகப்படுத்தல், அதனால் கட்டுப்பாடில்லாத வளர்ச்சிப்பெருக்கம்.
  • வளர்ச்சிக்கு எதிரான சைகைகளுக்கும் உணர்திறன் இல்லாமை, அதனாலும் கட்டுப்பாடில்லாத வளர்ச்சிப்பெருக்கம்.
  • திட்டமிட்ட செல் மரணம் செய்வதற்கு தகுதி இழப்பு, உயிரணு சார்பு பிழைகள் இருந்தாலும், மற்றும் வெளியில் இருந்து வளர்ச்சிக்கு எதிரான சைகைகள் இருந்தாலும், வளர்ச்சியை தொடருவதற்கு இயலாமை.
  • முதிர்ச்சியடைதலுக்கான தகுதி இழப்பு, அதனால் எல்லை இல்லாத தன் பிரதி எடுக்கும் தன்மை.(அமரத்தன்மை)
  • இரத்தக் குழாய் வளர்ச்சியினை கையகப்படுத்தல், கட்டியின் உயிர்ப்பற்ற ஊட்டச்சத்து பரவல் எல்லைக்கும் மீறி வளரவிடுதல்
  • அருகாமையில் இருக்கும் திசுக்களை பரவி கையகப்படுத்தல், இது பரவும் (கார்சினோமா) புற்றுநோயின் வரையறுத்த பண்பு ஆகும்.
  • தூரமான இடங்களில் இடம் மாறல்களுக்கான கட்டும் சக்தியை கையகப்படுத்தல், இது புற்றுப்பண்பு கட்டிகளின் முக்கிய பண்பாகும். (கார்சினோமா (புற்றுநோய்) அல்லது இதர வகைகள்).
இது போன்ற பல நடவடிக்கைகளை நிறைவு செய்வது ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், இவை இல்லாமல் :
  • உயிரணுக்களின் பிழைகளை திருத்துவதற்கான தகுதியை இழத்தல், அதனால் பிறழ்வுகள் விகிதம் (ஜெநோமிக் நில்லாமை), அப்படி இதர மாறுதல்களை விரைவாக்குவது.
கார்சினோமா (புற்றுநோய்)களில் இவ்வாறான உயிரியல் மாற்றங்கள் மரபார்ந்தவை ஆகும்; இதர புற்றுப்பண்பு கட்டிகளில் இவை அனைத்தும் தேவைப்படாது. எடுத்துக்காட்டு, திசு பரவல் மற்றும் தூரமான இடங்களுக்கு இடம் மாறுதல் இரத்த வௌளை அணுக்களின் பொதுவான பண்புகள் ஆகும்; இவ்வாறான படிகள் லுகேமியா (இரத்தப்புற்றுநோய்)தாக்குதலில் தேவைப் படாது. இந்த வேறுபட்ட நடவடிக்கைகள் தனி பிறழ்வுகளை குறிப்பதாகாது. எடுத்துக்காட்டு, ஓர் ஒற்றை உயிரணுவை செயலிழக்க செய்தலுக்கான,p53 புரதத்திற்கான குறியிடுதல், காரணம் ஜெநோமிக் நில்லாய்மை ஏற்படும், திட்டமிட்ட செல் மரணம் தடைபடும், இரத்தக் குழாய் வளர்ச்சி அதிகரிக்கும். எல்லா புற்றுநோய் உயிரணுக்களும் பகுப்பதில்லை. அதாவது, புற்றுநோய் கட்டிகளின் உயிரணுக்களின் உட்கணம்,புற்றுநோய் தண்டு உயிரணுக்கள் என அழைக்கப்படுவது, அவற்றையே பெருக்கும் மற்றும் வேறுபட்ட உயிரணுக்களை உருவாக்கும்.[39]

தடுக்கும் முறைகள்

புற்றுநோய் தடுப்பு என்பது புற்றுநோய் நிகழ்வை குறைப்பதற்கான சுறுசுறுப்பான நடவடிக்கைகளை எடுத்தல் என்று வரையறுத்துள்ளார்கள். இதை கார்சினொஜென்ஸ் என்ற புற்று ஊக்கிகளை தவிற்பதாலும் அல்லது அதன் வளர்சிதை மாற்றதை மாற்றி அமைப்பதாலும், வாழ்க்கை பாணியை அல்லது உணவு முறைககளில் சிறு திருத்தங்கள் செய்தும், மற்றும் / அல்லது மருத்துவ குறுக்கீடு மூலமாகவும் ((இரசாயன வகை தடுப்பு முறையில், முன்-புற்றுப்பண்பு கட்டிகளுக்கு சிகிச்சை அளித்து நிறைவேற்றலாம்). நோய் விபரவியலுக்கான கருத்துப்படிவம் படி "தடுப்பு" என்பது பொதுவாக தொடக்க நிலை தடுப்பு , இதில் எந்த நோயாலும் பாதிக்கப்படையாத மக்கள் அடங்குவர், அல்லது உயர் நிலை தடுப்பு, இது நோய் மீண்டும் வராமல் இருப்பதற்கான நோக்குடன் ரிகர்ரன்ஸ் (மறுபீடிப்பை) குறைத்தல் அல்லது முன்னதாகவே அறிந்த நோயின் சிக்கல்களை குறைத்தல்.

மாற்றியமைக்கத்தகுந்த ("வாழ்க்கைப்பாணி") சூழ் இடர் காரணிகள்.

மேலும் பார்க்க: Alcohol and cancer

நுரையீரல் மாதிரியில் மூச்சுக் குழாய்களின் அருகாமையில் தோன்றும் (வெள்ளையான கட்டி) ஒரு செதிள் உயிரணு கார்சினோமா (புற்றுநோய்)
புற்றுநோய் ஏற்படுவதற்கான பெரும்பான்மை சூழ் இடர் காரணிகளானவை சுற்றுச்சூழல் சார்ந்தவை அல்லது வாழ்க்கைப் பாணியை சார்ந்தவை ஆகும், அதனால் புற்றுநோய் ஒரு பெரிய தடுக்கக்கூடிய நோய் என்று உரிமையாக கேட்பவரும் உண்டு.[40] மாற்றியமைக்கத்தகுந்த புற்றுநோய் சூழ் இடர் காரணிகளுக்கான எடுத்துக்காட்டில் மது அருந்துதல் (இது வாய், உணவுக்குழாய், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுக்கான அதிக சூழ் இடர் கொண்டது), புகை பிடித்தல் (நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களில் 20% பெண்கள் புகை பிடிக்கவில்லை என்றாலும், எதிரில் 10% ஆண்கள் [41]), உடல் மந்த நிலை (இது பெருங்குடல், மார்பக, மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது), மற்றும் மிகையான உடல் எடையுடன் /உடல் தடித்து இருப்பது (இது பெருங்குடல், மார்பக, கருப்பையக மற்றும் இதர புற்றுநோய்களுடன் அதிக சூழ் இடருடன் தொடர்புடையது). நோய் விபரவியல் ஆதாரங்களை கருத்தில் கொண்டு, அதிகமான அளவில் மது அருந்துவதை தவிர்த்தால் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் குறையும்; எனினும், இதை புகையிலை பழக்கத்துடன் ஒப்பிடுகையில், இதன் விளைவுகளின் குறைந்த அல்லது சிறிய முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஆதாரத்தின் வலு பலநேரங்களில் பலவீனமாகவே உள்ளது. மற்ற வாழ்க்கைமுறை மற்றும் சுகாதார காரணிகள் புற்றுநோய் சூழ் இடரை பாதிக்கும் (சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ) இதில் பாலியல் சார்ந்த நோய்களும் (மனித பாப்பிலோமா நச்சுயிரி), வெளி நொதிகளின் உபயோகம், அயனாக்கற்கதிர்ப்புக்கு வெளிப்பாடு மற்றும் புற ஊதாக் கதிரியக்கம், மற்றும் சில பணி மற்றும் ரசாயனம் சார்ந்த வெளிப்பாடுகள் போன்றவை அடங்கும்.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும், குறைந்தது 200,000 மக்கள் பணி இடம் சார்ந்த புற்றுநோயால் இறக்கின்றனர்.[42] கோடிக்கணக்கான ஊழியர்கள் ஆச்பெச்டாஸ் நாருகளை சுவாசிப்பதாலும் மற்றும் புகையிலை புகை பிடிப்பதாலும், பணி இடத்தில் பென்சீன் போன்ற இரசாயனங்களின் வெளிப்பாட்டினாலும் அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் மற்றும் இடைத்தோலியப்புற்று அல்லது லுகேமியா (இரத்தப்புற்றுநோய்) போன்ற இதர புற்றுநோய் வரும் சூழ் இடர் பெருகிக்காண்கிறது.[42] தற்போது, மிகுதியான புற்றுநோய் இறப்புகள் வளர்ச்சி பெற்ற நாடுகளில் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.[42] அமெரிக்காவில் மட்டும் ஆண்டு தோறும் குறைந்தது சுமார் 20,000 மக்கள் புற்றுநோயால் இறக்கிறார்கள் மேலும் 40,000 புதிய புற்றுநோய் நிகழ்வுகள் பணி சார்ந்த சூழ் இடர்களால் ஏற்படுகின்றன.[43]

பத்தியம்

உணவு முறை மற்றும் புற்றுநோய் சார்ந்த கருத்திணக்கமானது உடல் பருமன் புற்றுநோய் ஏற்படும் சூழ் இடரை அதிகரித்திருக்கிறது என்பதாகும். வேறுபட்ட பத்திய வழக்கங்கள் அடிக்கடி புற்றுநோய் நிகழ்வுகளில் உள்ள வேறுபாடுகளை நாடுகளிடையே காட்டுகிறது. (எ.கா.இரைப்பைக்குரிய புற்றுநோய் ஜப்பானில் அதிகமாக நிகழ்கிறது, பெருங்குடல் புற்றுநோய் அமெரிக்காவில் பொதுவாக காணப்படுகிறது. முன் கூறிய எடுத்துக்காட்டில் ஹப்லோக்ரூப்ஸ் (ஒற்றையினங்கள்) கணக்கில் எடுக்கவில்லை). வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் அவர் குடியேறிய புதிய நாட்டின் சூழல் இடரை பெருக்குகின்றனர், அடிக்கடி ஒரே தலைமுறையில் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, இது உணவு மற்றும் புற்றுநோய்க்கு இடையே இருக்கும் இணைப்பு கணிசமானதாகும் என்பதை அறிவுறுத்துகிறது.[44] உடல் பருமனை ஒரு மக்கள் தொகையில் குறைத்தால், புற்றுநோய் நிகழ்வை குறைக்குமா என்பது தெரியவில்லை.
ஒரு தனிப்பட்ட பொருள் (உணவையும் சேர்த்து) சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் கொண்டதாக அடிக்கடி அறிக்கைகள் வந்தாலும், இவற்றில் சிலதே புற்றுநோயுடன் தொடர்பு கொண்டதாக நிரூபித்துள்ளது. இந்த அறிக்கைகள் மிக்கவும் விலங்குகள் அல்லது செயற்கை உயிரணு வளர்ப்பு ஆய்வுகளை ஆதாரமாக கொண்டது.பொது சுகாதார பரிந்துரைகள் இவ்வறிக்கைகளின் அடிப்படையில் செய்ய இயலாது, எனினும் இவை ஆதாரப்பூர்வமாக நோக்கற்குரிய மனித கள ஆய்வுகள் (அல்லது எப்போதாவது இடைத்தடை கள ஆய்வுகள்) மூலம் நிரூபணம் செய்தால் மட்டுமே கருத்தில் கொள்ள முடியும்.

ஒரு பெருங்குடல் பகுதி நீக்கிய மாதிரியின் பரவும் பெருங்குடல் மலக்குடலுக்குறிய கார்சினோமா (புற்றுநோய்) (மேலே நடுவில்)
முதன்மையான புற்றுநோய் சூழ் இடர் ஒடுக்கங்களுக்கு உத்தேசித்த பத்திய இடைத்தடைகளை பயன்படுத்துவதை நோய் விபரவியல் சங்கத்தின் ஆய்வுகள் ஆதரிக்கின்றன. குறைவாக இறைச்சி உட்கொண்டால் பெருங்குடல் புற்றுநோய்க்கான சூழ் இடர்கள் குறைகின்றன என்பதை ஒரு அறிக்கை எடுத்துக்காட்டுகிறது, இது போன்ற அறிக்கைகள் இந்த ஆய்விற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.[45] மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான சூழ் இடர் காபி பருகுவதினால் குறைகின்றன என்று ஒரு அறிக்கை கூறுகிறது.[46] வாட்டு இறைச்சியை உட்கொண்டால் வயிற்று புற்றுநோய்,[47] பெருங்குடல் புற்றுநோய் ,[48] மார்பக புற்றுநோய்,[49] மற்றும் கணையச்சிரை புற்றுநோய்க்கான சூழ் இடர் அதிகரிக்கின்றன,[50] அதிக வெப்பத்தில் இவ்வுணவு பொருட்களை சமைத்தலால் பென்சோபைரீன் போன்ற புற்று ஊக்கிகள் தோன்றுவது தான் இதற்கான காரணம்.
மரக்கறி உணவு மற்றும் வாழ்க்கைப்பாணி மாறுதல்களால் சுக்கிலவகம் புற்றுநோயால் பாதிப்படைந்த பொதுவாக ஏற்றுக்கொண்ட சிகிச்சை முறைகளை பயன்படுத்தாத ஆண்களில் புற்றுநோய் குறியீடுகள் குறைந்து காணப்பட்டதை 2005 ஆம் ஆண்டில் நடத்திய உயர்நிலை தடுப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[51] 2006 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வு மேல் காணப்பட்ட ஆய்வின் முடிவுகளை பெருக்கிக்காட்டியது, இதில் பங்கேற்ற 2400 பெண்களில் பாதி நபர்களுக்கு பொதுவான உணவும் மற்றவர்களுக்கு 20% கொழுப்புச்சத்து கலோரிகள் குறைவாக இருந்த உணவும் அளித்தார்கள். கொழுப்புச்சத்து குறைவாக இருந்த உணவை உட்கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மீளல் அறிகுறிகள் குறைவாக இருந்ததை டிசம்பர் 2006 இடைக்கால அறிக்கை தெரிவிக்கிறது.[52]
அண்மையில் நடத்திய ஆய்வுகள் சில புற்றுநோய்களுக்கும் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் இதர எளிமையான கார்போஹைட்ரேட்டுகளுக்கும் இணைப்பு உள்ளதை பறைசாற்றுகிறது.[53][54][55][56][57] எந்த அளவுக்கு இவை இயைப்படுகிறது மற்றும் காரணமாகச்செயல்படுகிறது என்பது சர்ச்சைக்குள்ளானது,[58][59][60] இருந்தாலும் உண்மையில் சில நிறுவனங்கள் தூய்மித்த வெல்லங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை குறைவாக உட்கொள்வதை அவர்களது புற்றுநோய் தடுப்பு பத்தியத்தில் பரிந்துரைக்கின்றனர்.[61][62][63]
நவம்பர் 2007 ஆம் ஆண்டில், தி அமேரிக்கன் இன்ஸ்டிடுட் போர் கான்செர் ரிசெர்ச்(ஏஐசிஆர்), மற்றும் வோர்ல்ட் கான்செர் ரிசெர்ச் பண்ட் (WCRF) இணைந்து புட், நுட்ரிஷன், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் ப்ரிவென்ஷன் ஒப் கான்செர்:எ குளோபல் பெர்ச்பெச்டிவ், என்ற "புட், பிசிகல் ஆக்டிவிடி மற்றும் கான்செர் பற்றிய மிகவும் தற்போதைய மற்றும் எல்லாமுட்கொண்ட பகுப்பாய்வு கொண்ட இலக்கியத்தை" வெளியிட்டார்கள்.[64] இந்த WCRF/AICR வல்லுநர் அறிக்கையில் மக்களுக்கு பயன்படக்கூடிய புற்றுநோய் தாக்குதலுக்கான சூழ் இடரை குறைப்பதற்காக 10 பரிந்துரைகளை பட்டியலிட்டுள்ளார்கள், அவற்றில் கீழே கொடுத்துள்ள உணவு சம்பந்தப்பட்ட பின்பற்றத்தக்க வழிமுறைகள் அடங்கும்:(1) எடையை அதிகரிக்கும் உணவுகளை மற்றும் பானங்களை குறைத்தல், அதாவது சக்தி நிறைந்த உணவுகள் மற்றும் சீனி கலந்த பானங்கள், (2) தாவரங்களை மூலமாகக்கொண்ட உணவுகளை மிகையாக உண்பது, (3) புலால் இறைச்சியை குறைவாக உட்கொள்வது மற்றும் பதப்படுத்திய இறைச்சியை தவிர்ப்பது, (4) மதுபானங்களை குறைத்து உட்கொள்வது, மற்றும் (5) உணவில் உப்பை குறைத்து உட்கொள்வது மேலும் காளானால் பாதித்த உணவுகளை (தானியங்களை) மற்றும் பருப்பு வகைகளை (அவரையினத்தினை) தவிற்பது போன்றவை அடங்கும்.[65][66]

உயிர்ச்சத்துக்கள்

புற்றுநோயை கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்களால் தடுக்கலாம் என்ற யோசனை இதற்கு முன் நடந்த கவனிப்புகளில் மனித நோய்கள் மற்றும் உயிர்சத்துக் குறைவுகளுக்கு இடையே தொடர்புறல் காணப்பட்டதே ஆகும், அதாவது உயிரைப் போக்கும் இரத்த சோகையான பித்தபாண்டு மற்றும் வைடாமின் 12 குறைவுக்கான தொடர்புறல், கேவிநோய் வைட்டமின் சி குறையுடன் தொடர்புறல் போன்றவை. புற்றுநோயைப் பொறுத்தவரை இது பெரிய அளவில் நிரூபிக்கப் படவில்லை, மேலும் கூடுதல் உயிர்ச்சத்து அளிக்கும் மூலப்பொருள்கள் பெரிய அளவில் புற்றுநோயை தடுப்பதாகவும் தெரியவில்லை. புற்றுநோயுடன்-போராடும் உணவில் காணப்படும் பொருட்களும் எண்ணிக்கையில் மிகையாகவும் மேலும் வேறுபட்டும் காணப் படுகின்றன, அவை முன்னர் சரிவர அறிவுக்கு எட்டவில்லை, அதனால் நோயாளிகளை அதிக அளவில் புத்தம்புதியதானதும், பதப்படுத்தப் படாத பழங்கள் மற்றும் காய்கறிகளை முழு அளவில் உடல்நலம் பயனடைவதற்கு, உணவில் சேர்த்துக்கொள்ள, அறிவுரை வழங்கப்படுகிறது.[67]
நோய் விபரவியல் ஆய்வுகள் குறைவான வைட்டமின் D நிகழ்நிலைக்கும் புற்றுநோய் தொடர்புரல் இருப்பதால் புற்றுநோய் சூழ் இடருக்கு அதிக வாய்ப்புள்ளதை காட்டுகிறது.[68][69] எனினும், இது போன்ற ஆய்வுகளின் விளைவுகளை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும், ஏன் என்றால் இரு காரணிகளுக்கிடையே இயைபுபடுத்தல் இருந்தாலும் ஒன்றின் விளைவாக மற்றொன்று ஏற்படுவதாக நிரூபிக்க இயலாது. (அதாவது இயைபுபடுத்தல் இருந்தாலும் அது நோய்க்காரணியாக இருக்காது).[70] வைட்டமின் D புற்றுநோயை தடுக்கவல்லது என்ற சாத்தியக்கூறு, சூரிய ஒளி வெளிப்பாட்டின் காரணம் பரவும் புற்றிநம் ஏற்படும் சூழ் இடருடன் முரண்பாடாக உள்ளது. சூரிய ஒளிக்கு உடலை வெளிப்படுத்துவதால் இயற்கையாகவே மனித உடலில் வைட்டமின் D உற்பத்தி பெருகுகிறது, சில புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் சூரிய வெளிப்பாட்டால் ஏற்படக்கூடிய தீங்கு விளைவிக்கும் ஆற்றல் கொண்ட புற்றுப்பண்பு தாக்கங்களை விட, சூரிய வெளிச்சத்திற்கு உட்பட்ட சருமத்தில் உற்பத்தியாகக்கூடிய மிகையான வைட்டமின் D கலவையின் புற்றுநோயை தடுப்பதற்கான விளைவுகள் அதிக அளவில் சாதகமாக இருக்கும் என்று வாதிக்கின்றனர். 2002 ஆம் ஆண்டில், டா. வில்லியம் B. கிராண்ட் அமெரிக்காவில் ஆண்டுதோறும் புற்றுநோய் காரணமாக 23,800 முழுமுதிர்வற்ற இறப்புகள் போதுமளவிற்கு UVB வெளிப்பாடு இல்லாததால் (தெளிவாக வைட்டமின் D குறைவால்) நிகழ்வதாக கூறுகிறார்.[71] இந்த எண்ணிக்கையானது, மெலனோமா (கருங்கட்டி) அல்லது செதிள் கலன் கார்சினோமாவால் (புற்றுநோய்) நிகழும் 8800 இறப்புகளைவிட மிக அதிகமானது, அதனால் சூரிய வெளிப்பாட்டால் ஒட்டுமொத்தமாக பயனடையலாம் என்பது அவர் கருத்து. மற்றோர் ஆராய்ச்சிக்குழுவினர் [72][73] ஆண்டுதோறும் முழுமுதிர்ச்சி அடையாமலேயே புற்றுநோய் காரணமாக 50,000–63,000 தனி நபர்கள் அமெரிக்காவில் மற்றும் 19,000-25,000 தனிநபர்கள் UK நாட்டிலும் குறைவான வைட்டமின் D காரணம் இறப்பதாக மதிப்பிட்டுள்ளனர்.
பீட்டா-காரோடீன் சார்ந்த நிகழ்வு சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகளின் முக்கியத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.புறப்பரவியல் நிபுணர்கள் ஆராய்ந்த உணவு மற்றும் ஊனீர் அளவுகளை உற்றுநோக்கிய பொழுது அதிக அளவில் பீட்டா-காரோடீன்,[[வைட்டமின் A (A உயிர்ச்சத்து)|வைட்டமின் எ]]யின் முன்னோடியை கண்டனர், இவை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது, புற்றுநோயின் சூழ் இடர்களை குறைக்கின்றது. இந்த தாக்கம் நுரையீரல் புற்றுநோயில் அதிகமாக காணப்பட்டது. இந்த கருதுகோள் காரணம் மேலும் அதிக அளவிலான சமவாய்ப்புள்ள மருத்துவ சோதனை ஒத்திகைகள் பின்லாந்து மற்றும் அமெரிக்க (CARET ஆய்வு) நாடுகளில் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் நடந்தன. இந்த ஆய்வில் 80,000 புகைப்பிடிப்போர் அல்லது புகைபிடிப்பை விட்ட மக்களிடம் பீட்டா-காரோடீன் அல்லது மருந்துப்போலிகள் சேர்க்கைப்பொருட்களாக அளித்து சோதித்துப்பார்த்தனர். எதிர்பார்ப்பிற்கு எதிராக, இச்சோதனைகளில் பீட்டா-காரோடீன் சோக்கைப்பொருள் நுரையீரல் புற்றுநோய் நிகழ்வு மற்றும் இறப்பியல்பை குறைத்ததாக தெரியவில்லை. உண்மையில், நுரையீரல் புற்றுநோய் உண்டாவதற்கான சூழ் இடர் சற்று குறைந்தாலும் பீட்டா-காரோடீன் இதை சற்று உயர்த்தினாலும், அது மிகையாக குறையவில்லை, அதனால் இந்த ஆய்வு சற்று முன்பாகவே கைவிடப்பட்டது.[74]
ஜெர்னல் ஒப் தி அமெரிக்கன் மெடிகல் அஸ்சோசியேஷன் (JAMA) 2007 ஆம் ஆண்டில் போலிக் அமிலத்தின் சேர்க்கையால் பெருங்குடல் புற்றுநோய் தவிர்க்கப்படுவதில்லை என்றும், மேலும் போலேட் பயன்படுத்தியவர்களுக்கு பெருங்குடல் பவளமொட்டுக்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தங்களது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.[75]

கெமொப்ரிவேன்ஷன் (இரசாயன வகை தடுப்புமுறை)

மருந்துகளை உட்கொள்வதால் புற்றுநோயை தடுக்க இயலும் என்ற கருத்துப் படிவம் மனதை கவர்வதாக இருப்பதுடன், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ரசாயனவகை தடுப்புமுறையானது பல உயர்தர மருத்துவ சோதனை ஒத்திகைகளில் பயனுள்ளதாக இருப்பதால் அதற்கான ஆதரவு இருந்து வருகிறது.
தமொக்சிபென் என்ற ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM), தொடர்ச்சியாக தினமும் ஐந்து வருடங்களுக்கு உட்கொண்டால், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படும் சூழ் இடர் அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில் 50% அளவுக்கு குறைவதாக கண்டறிந்துள்ளார்கள். அண்மையில் நடந்த ஒரு ஆய்வில் தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி ரலோக்சிபென் என்ற மருந்தும் தமொக்சிபென் போலவே அதே போன்ற இயல்புகளை கொண்டு, அதிக சூழ் இடர் கொண்ட பெண்களில், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது, மேலும் அது சாதகமான பக்கவிளைவுகள் கொண்டதாகவும் உள்ளது.[76]
ரலோக்சிபென் என்பதும் தமொக்சிபென் போல ஒரு தேரும் எஸ்ட்ரோஜன் வாங்கி பண்பேற்றி (SERM) ஆகும்; மேலும் அது (STAR ஒத்திகையில் நடந்ததை போலவே) தமொக்சிபென் னுக்கு இணையாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சூழ் இடரை உயர்ந்த சூழ் இடர் கொண்ட பெண்களில் குறைக்கவல்லதாகும். இந்த ஒத்திகையில், அது ஏறத்தாழ 20,000 மகளிரை சோதனையில் ஈடுபடுத்தியது, ரலோக்சிபென் உட்கொண்டவர்களுக்கு, தமொக்சிபேன் பயன் படுத்தியவர்களை விட குறைவான பக்க விளைவுகள் ஏற்பட்டது, எனினும் அது அதிக அளவில் DCISஐ உற்பத்தி செய்தது.[76]
பிநஸ்டேரைட், அது ஒரு 5-அல்பா-ரிடக்ட்ஸ் இன்கிபிடர் ஆகும், சுக்கிலவகம் புற்று நோய் ஏற்படும் சூழ் இடரை அது குறைப்பதாக கண்டறிந்துள்ளது, ஆனால் அவை மிக்கவாறும் தரம் குறைந்த புற்றுநோய்கள் ஆகும்.[77] COX-2 மட்டுப்படுத்திகள் ரோபிகோக்சிப் மற்றும் சேலேகோக்சிப் பயன்பாட்டால் பெருங்குடல் பவளமொட்டுக்கள் பாதிப்பை அறிவதற்கு குடும்பவழி சுரப்பிப்பெருக்க விழுதிய நோயாளிகளையும் [78] பொது மக்களையும் கொண்டு ஒத்திகை நடந்தது. [163][165] இரு குழுக்களிலும்,பெருங்குடல் விழுது நிகழ்வு ஏற்படும் சூழ் இடரில் கணிசமான குறைப்பு இருந்தாலும், ஆனால் அதனால் இதய குழலில் நச்சுப்பண்பு மிகையாக தென்பட்டது.

மரபுக்கரு பரிசோதனை

புற்றுநோய்க்கு அதிக சூழ் இடர் உள்ள தனி மனிதர்களின் மரபுக்கரு பரிசோதனை சில புற்றுநோய் சம்பந்தமுள்ள பிறழ்வுகளுக்கு நிகழக்கூடியவையாகும். மரபுக்கரு பிறழ்வுகளால் பாதிப்படைந்தவர்களுக்கு புற்றுநோய் தாக்கத்தின் சூழ் இடர் அதிகமாக உள்ளதால், அவர்கள் அதிக அளவிலான கடும் கண்காணிப்பு, இரசாயன தடுப்புமுறைகள், அல்லது சூழ் இடரை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற புற்றுநோயை முன்னரே அடையாளம் காட்டும் பரிசோதனைகள், மரபுரிமை சார்ந்தவர்களுக்கு சூழ் இடர் அதிகமாக உள்ளதால், புற்றுநோயை தடுக்கும் அறுவை சிகிச்சை மற்றும் கடும் கண்காணிப்பு போன்ற இடைத்தடைகளுடன் செயல்படுவது உயிரை காக்கவல்லதாக இருக்கும்.
மரபணு புற்றுநோய் வகைகள் கிடைக்கக்கூடிய தன்மை
BRCA1, BRCA2 மார்பக, முட்டையக, கணையம். மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியாக கிடைக்கும்
MLH1, MSH2, MSH6, PMS1, PMS2 பெருங்குடல் , கருப்பைக்குரிய, சின்ன குடல், வயிறு, சிருநீருக்குரிய பாதை மருத்துவ மாதிரிகளுக்கு வணிகரீதியில் கிடைக்கும்

தடுப்பூசி போடுதல்

நச்சுயிரிகள் போன்ற புற்றுநோய் தோற்று காரணிகளால் தோற்று நோய் வராமல் தடுப்பதற்காக முற்காப்பி தடுப்பூசிகள் கண்டறிந்துள்ளார்கள். மேலும் குறிப்பிட்ட புற்றுநோயைக் குறிவைத்த, எபிடோபுகளுக்கு (வெளிசிறுசுறாக்கள்) (எதிராக செயல்படும் நோய் தடுப்பாற்றல் கொண்ட) மருத்துவ தடுப்பூசிகளை மேம்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.[79]
மேலே கூறியது போல், மனித பாப்பிலோமா நச்சுயிரி தடுப்பூசி ஒன்று நிகழ்வில் உள்ளது, அது சில பாலியல் சார்புடைய மனித பாப்பிலோமா நச்சுயிரியை குறியாக கொண்டு, அதனால் விளையும் கழுத்துப்பட்டை புற்றுநோய் மற்றும் இன உறுப்பு மருக்கள் போன்றதை தடுப்பதற்கான தடுப்பூசியாகும். ஒக்டோபர் 2007 ஆம் ஆண்டு வரை இரு HPV தடுப்பூசிகளே சந்தையில் கிடைக்கப் பெற்றது, அவை கர்டாசில் மற்றும் செர்வரிக்ஸ் ஆகும்.[79] மேலும் ஹெபடிடிஸ் B தடுப்பூசி, அது ஹெபடிடிஸ் B தீநுண்மத்தினால் ஏற்படும் தொற்றை தடுக்கிறது, அந்த தொற்று நோய்பரப்பி மூலம் கல்லீரல் புற்றுநோய் வரலாம்.[79] ஒரு விலங்கின மெலனோமா (கருங்கட்டி; கறும்புத்து) தடுப்பூசியைக் கூட மேம்படுத்தியுள்ளார்கள்.[80][81]