Thursday, July 18, 2013

அரிய உலோகம்

அரிய உலோகம் என்பது, மிகவும் அரிதாகக் கிடைப்பதும், இயற்கையில் காணப்படுவதும், உயர்ந்த பொருளியற் பெறுமதி கொண்டதுமான ஒரு உலோக வேதியியல் தனிமம். இவை பொதுவாகக் கம்பியாக நீட்டத்தக்க தன்மையும், உயர் மினுக்கமும் கொண்டவை. முன்னர் அரிய உலோகங்கள் நாணயமாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இவை முதலீடாகவும், தொழிற்றுறைப் பண்டங்களாகவுமே பயன்படுகின்றன. பொன், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் என்பன அரிய உலோக வகையைச் சேர்ந்தவை.
மிகவும் அறியப்பட்ட அரிய உலோகங்கள், நாணய உலோகங்களான பொன்னும் வெள்ளியும் ஆகும். தொழிற்றுறையிலும் இவற்றுக்குப் பயன்பாடு இருந்தபோதும், கலைப்பொருட்கள், நகை, நாணயங்கள் ஆகியவை தொடர்பிலேயே மக்கள் இவற்றைப் பெரிதும் அறிந்துள்ளனர். பிளாட்டினக் கூட்டத்தைச் சேர்ந்த ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஓசுமியம், இரிடியம், பிளாட்டினம் ஆகியவையும் அரிய உலோகங்களே. இவற்றுள் பிளாட்டினம் மிகப் பரவலான விற்பனைப் பண்டமாக உள்ளது.[1]
சில அரிய உலோகங்கள்
அரிய உலோகங்களுக்கான கேள்வி, அவற்றின் பயன்பாட்டுத் தேவையினால் மட்டுமன்றி, ஒரு முதலீடாகவும், மதிப்பின் நிலைக்களனாகவும் அவை வகிக்கும் பங்கினாலும் தீர்மானிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே அரிய உலோகங்கள் பொதுவான தொழிற்றுறை உலோகங்களைவிட விலை கூடியனவாக உள்ளன.

பொருளடக்கம்

பாளநிலை அரிய உலோகம் (பாளகம்)

1000 அவுன்சு வெள்ளிக் கட்டி
அரிதாகக் கிடைப்பதனாலேயே உரு உலோகம் அரிய உலோகம் ஆகிறது. மேற்படி உலோகங்களின் புதிய மூலங்களைக் கண்டுபிடிப்பதனாலும், அவற்றை அகழ்வதிலும், பிரித்தெடுப்பதிலும் மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதாலும், அரிய உலோகங்களின் பெறுமதி குறையக்கூடும். அரிய உலோகத் தகுதியானது குறித்த உலோகத்துக்கான உயர்ந்த கோள்வியினாலும், சந்தைப் பெறுமதியினாலும் எற்படக்கூடும். அரிய உலோகங்களைத் தொகையாகக் கையாளும் நிலையில் அவற்றைப் பாளகம் (bullion) எனலாம். இவை பண்டச் சந்தைகளில் வணிகம் செய்யப்படுகின்றன. இவை பின்னர் குற்றிகளாகவும், நாணய வடிவிலும் வார்க்கப்படுகின்றன. பாளகத்தின் மதிப்பை அதன் திணிவையும், தூய்மையையும் வைத்தே முடிவு செய்கின்றனர்.[2]

தூய்மையும் திணிவும்

ஒரு 500 கிராம் வெள்ளிப் பாளகக் குற்றி.
தூய்மையின் அளவு வெளியீடுகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. 99.9% தூய்மையே பொதுவாகக் காணப்படுவது. பெருமளவில் உற்பத்தி செய்யப்படுபவற்றுள் கனேடிய தங்க மேப்பிள் லீஃப் தொடரில் உள்ள காசுகளே ஆகக் கூடிய அளவாக 99.999% தூய்மை கொண்டவை. அகழ்ந்தெடுத்துத் தூய்மையாக்கும் வழிமுறைகளில் முழுமையான தூய்மையை அடைவது அணுகற்கோட்டு அடிப்படையிலேயே (asymptotically) ஆதலால், 100% தூய்மை சாத்தியம் அற்றது. காசுகள் கலப்புலோகத்தின் குறித்த ஒரு நிறையையும், உள்நாட்டுத் தரநிலைக்கேற்ற தூய்மை அளவையும் கொண்டிருந்தன. குறுகெரான்ட் காசுகளே தூய பொன்னின் அடிப்படையில் அளக்கப்பட்ட, தற்காலத்தின் முதல் எடுத்துக்காட்டு. இது 12/11 அவுன்சுகள் நிறை கொண்ட 11/12 தூய பொன்னைக் கொண்டிருக்க வேண்டும். பிரித்தானிய சவரின் போன்ற பாளகக் காசுகள் சிலவற்றில் அவற்றின் தூய்மை அளவோ, அவற்றில் உள்ள தூய பொன்னின் அளவோ குறிக்கப்படுவது இல்லை. ஆனாலும், அவற்றின் உள்ளீடுகள் ஒருமாதிரியாகவே இருக்கும் என்று கொள்ளப்படுகிறது. பல நாணயங்களில் ஒரு பணப் பெறுமானம் குறிக்கப்படுவது வழக்கம். அமெரிக்காவின் இரட்டைக் கழுகு இதற்கு எடுத்துக்காட்டு.

காசு அச்சிடல்

ஒரு அவுன்சு வியன்னா பிலார்மோனிக் காசு
பல நாடுகள் அரிய உலோகக் காசுகளை அச்சிடுகின்றன. பெயரளவில் இவற்றைச் சட்டமுறைச் செலவாணியாக வெளியிட்டாலும், இவற்றில் குறிக்கப்படும் பெறுமதி இவற்றின் உண்மையாக பெறுமதியிலும் மிகமிகக் குறைவானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கனடா வெளியிட்ட, ஒரு டிரோய் அவுன்சு (31.1035 கிராம்) நிறை கொண்ட ஒரு பொற்காசின் (கோல்ட் மேப்பிள் லீஃப்) முகப்புப் பெறுமானம் 50 டாலர்கள். ஆனால் இதன் சந்தைப் பெறுமானம் (மே 2011) ஏறத்தாழ 1,500 டாலர்கள்.[3] அரசுகள் அச்சடிக்கும் அரிய உலோகக் காசுகளுக்கு அவற்றின் உலோகப் பெறுமானத்துக்கு மேலாக ஓரளவு நாணயவியல் பெறுமானமும், அதன் தூய்மைக்கான சான்றுப் பெறுமதியும் இருப்பது உண்டு.
உலகின் மிகப்பெரிய அரிய உலோகக் காசுகளில் ஒன்று ஆசுத்திரேலியாவில் அச்சிடப்பட்ட 10,000 டாலர் ஆசுத்திரேலிய பொற்கட்டிக் (Australian Gold Nugget) காசு ஆகும். இது ஒரு கிலோகிராம் நிறை கொண்ட 99.9% தூய்மை கொண்ட பொன்னால் ஆனது. குறைந்த எண்ணிக்கையிலான இதைவிடப் பெரிய காசுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கையாள்வது நடைமுறைச் சாத்தியமாக இல்லாததால் இவற்றைப் பெருமளவில் அச்சிடுவது இல்லை. 260 டிரோய் அவுன்சுக்கும் (8 கிகி) கூடுதலான நிறை கொண்ட பொற்காசுகளை சீனா வெளியிட்டது. 20க்கும் குறைவான காசுகளே அச்சிடப்பட்டன. 2004ல், 100,000 யூரோ முகப்புப் பெறுமானம் கொண்ட பொற்காசுகளை (வியன்னா பிலார்மோனிக் காசு - Vienna Philharmonic Coin) ஆசுத்திரியா வெளியிட்டது. இது 31 கிலோகிராம் பொன்னால் ஆனது. 99.999% தூய்மையான ஒரு அவுன்சு கனேடிய கோல்ட் மேப்பிள் லீஃப் காசுகளைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு விளம்பர உத்தியாக 100 கிலோகிராம் 99.999% தூய பொன்னால் ஆன காசு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் கனடா வெளியிட்டது. இதன் முகப்புப் பெறுமானம் 1 மில்லியன் டாலர்கள். தற்போது கேட்பவர்களுக்கு இது அச்சிட்டுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு, இதில் அடங்கிய பொன்னின் சந்தை விலைக்கும் கணிசமான அளவு கூடுதலாக விலை குறிக்கப்படுகிறது.[4]

பொருளியல் பயன்பாடு

1 கிகி தங்கக் கட்டி
பொன், வெள்ளி ஆகிய உலோகங்களும், சில வேளைகளில் பிற அரிய உலோகங்களும், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. விலை ஒப்பீட்டளவில் கட்டுப்படியாகக் கூடியதாக இருப்பதாலும், சந்தையைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படும் பொன், பிளாட்டினம் ஆகியவற்றாலான காசுகளைப் போலன்றி வெள்ளிக்காசுகள் சேகரிப்புப் பொருள்களாகக் கருதப்பட்டுச் சந்தை விலையிலும் கூடிய பெறுமதி உடையனவாக மதிக்கப்படுவதாலும், வெள்ளிக் காசுகள், சேகரிப்பாளரால் கூடுதலாக விரும்பப்படுகிறது.

அலுமினியம்

ஒரு காலத்தில் அரிய உலோகமாக இருந்து பின்னர் சாதாரண உலோகமானது அலுமினியம். இது, புவியின் மேலோட்டில் மிகப் பொதுவாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்றாக இருந்த போதிலும், அதன் தாதுப் பொருட்களில் இருந்து அதனைப் பிரித்து எடுப்பது ஒரு காலத்தில் கடினமானதாக இருந்தது. இதனால் கூடிய செலவுடன் பிரித்து எடுக்கப்பட்ட குறைந்த அளவான அலுமினியம், பொன்னிலும் கூடிய பெறுமதி கொண்டதாக இருந்தது. 1855 ஆம் ஆண்டில் பிரான்சில் இடம்பெற்ற பன்னாட்டுக் கண்காட்சியில், பிரான்சின் அரச அணிகளுடன் அலுமினியக் கட்டிகளும் வைக்கப்படிருந்தன. மூன்றாம் நெப்போலியனின் மிக முக்கியமான விருந்தினர் உணவருந்துவதற்கு அலுமினியத்தினால் செய்யப்பட்ட கரண்டி முதலியன கொடுக்கப்பட்ட அதேவேளை, குறைவான முக்கியத்துவம் உடையவர்களுக்கு வெள்ளிக் கரண்டி முதலியன வழங்கப்பட்டன. அத்துடன், வாசிங்டன் நினைவுச்சின்னத்தின் பட்டைக் கூம்பு வடிவ உச்சி 100 அவுன்சு எடை கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்ட காலத்தில், அலுமினியத்தின் விலை வெள்ளியின் விலையை ஒத்திருந்தது. 1886 ஆம் ஆண்டில் அலுமினியத்தைப் பிரித்து எடுப்பதற்கான புதிய முறையைக் கண்டுபிடித்த பின்னர் அலுமினியத்தின் விலை நிரந்தரமாகவே வீழ்ச்சியடைந்துவிட்டது.

பாக்டீரியா (Bacteria)

பாக்டீரியா (Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள்[2] போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன. மனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்]].[3]. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு, தொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன.

பொருளடக்கம்

வரலாறு

1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார்[4]. அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[5][6][7]. பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்[8].

உருவவியல்

இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்[9]. பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்[10].

தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா

கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. [11]மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். [12] இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது [13] [14]

கோல்ட் கோஸ்ட் (Gold Coast) - ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து

கோல்ட் கோஸ்ட் (Gold Coast) ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது அடர்த்தி கூடிய நகரங்களில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவில் ஆறாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா நகரம் இதுவாகும். சூடான உப அயனமண்டலக் காலநிலை, அலைச் சறுக்கு கடற்கரைகள், கால்வாய் மற்றும் நீர்நிலைகள், இரவுக்கேளிக்கைகள், மழைக்காட்டு பின்னிலம் போன்றவை இந்நகரின் சிறப்பு அம்சங்களாகும்.

வரலாறு

பேர்லி ஹெட்சு, 1939 வாக்கில்
1770 மே 16 இல் கப்டன் ஜேம்ஸ் குக் எச்.எம்.எசு. எண்டெவர் கப்பலில் முதன் முதலில் இங்கு வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். நாடுகாண் பயணி கப்டன் மத்தியூ பிலிண்டேர்ஸ் நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் வடக்கில் இருந்து ஆஸ்திரேலிய கண்ட வரைபடத்தை வரையப் புறப்பட்ட போது 1802 ஆம் ஆண்டில் கோல்ட் கோஸ்டைக் கடந்தார். மொரிட்டோன் குடா தடமுகாமில் இருந்து தப்பிய குடியேற்றக் குற்றவாளிகள் இப்பிரதேசத்தில் பதுங்கியிருந்தனர். 1823 ஆம் ஆண்டு நாடுகாண் பயணி ஜோன் ஒக்ஸ்லி என்பவர் இங்கு வந்திறங்கும் வரை ஐரோப்பியர்கள் இங்கு பெருமளவு குடியேறவில்லை.
இக்கடல்நிலப்பகுதியில் மிகுந்து காணப்பட்ட இந்திய வேம்பு வகை (செவ்வகில் (red cedar) மரங்கள் 1800களின் நடுப்பகுதியில் மக்களை இங்கு ஈர்க்க ஆரம்பித்தது. இப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியான நெராங்கு என்ற இடத்தில் இதற்கான மூலவளம் இருப்பது கண்டறியப்பட்டு அங்கு இம்மரவகைகள் உண்டாக்கப்பட்டன. பின்னர் 1875 ஆம் ஆண்டில் சவுத்போர்ட் என்ற இடம் பிறிஸ்பேன் நகர உயர்குடி மக்களுக்கான சுற்றுலா இடமாகத் தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டது. இது பின்னர் கோல்ட் கோஸ்ட் என்ற பெயரில் மிக விரைவாக சுற்றுலாத் தளமாக விரிவாக்கப்பட்டது. இதற்கு கோல்ட் கோஸ்ட் என்ற பெயர் எப்படி உருவானது என்பதற்கு சரியான விளக்கம் இதுவரை தரப்படவில்லை. 1958 ஆம் ஆண்டில் சவுத்போர்ட், கூலங்கட்டா ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதிக்கு கோல்ட் கோஸ்ட் என்ர பெயர் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது.
1981 இல் கூலங்கட்டாவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் மக்கள்தொகை ஆஸ்திரேலியாவில் ஆறாவது இடத்தைப் பிடித்தது[2].

தங்கம் அல்லது பொன் (Gold)

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது இது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இதன் அடர்த்தி 19.3 அதாவது நீரைப்போல் சுமார் 19 மடங்கு எடையுள்ளது . இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.

பொருளடக்கம்

தங்கத்தின் தன்மை.

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பள பளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.

தங்கச் சுரங்கம்

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது.
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது.

தங்கத்தின் மதிப்பு

தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கத்தின் விலை

2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது.[1]
தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33 )

நாணயச் செலாவணி

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

தங்கத்தின் பயன்பாடு

தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா[சான்று தேவை].

பண்பாட்டு முக்கியத்துவம்

தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர் கஜனி முகம்மது என்ற முகலாய மன்னன் இந்தியாவிற்கு 17 முறை படையெடுத்து வந்து இங்குள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றான் என வரலாறு கூறுகிறது.[

Thursday, July 11, 2013

நயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி


குதிரை லாட அருவி (கனடியன்), மூன்று அருவிகளில் ஒன்று

நயாகரா அருவி அல்லது நயாகரா நீர்வீழ்ச்சி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.

"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.
"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.
இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.

அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.

பொருளடக்கம்

சிறப்பியல்புகள்

குதிரை லாட நீர்வீழ்ச்சி சுமார் 173 அடியிலிருந்து (53 மீ) விழுகிறது. அமெரிக்க நீர்வீழ்ச்சியின் உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. இதன்காரணமாக நீர்வீழ்ச்சியின் உயரம் 70-100 அடி (21-30 மீ) என வேறுபடுகிறது. பெரிய குதிரை லாட அருவியின் அகலம் 2,600 அடியாகவும் (790 மீ), அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அகலம் 1.060 அடியாகவும் (320 மீ) இருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்க உச்சிநிலைக்கும் கனடிய உச்சிநிலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,409 அடியாகும் (1,039 மீ) ஆகும்.
உச்ச பருவநிலை காலங்களில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 202,000 என கன அடி (5,700 மீ 3) அளவு கூட சில சமயங்களில் இருக்கிறது. இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுகின்ற நீரானது அதிரிப்பதன் காரணமாக எறீ (Erie) ஏரியின் நீர்மட்ட உயர்வும் அதிகமாகிறது, எனில் இவை நேரடியாக தொடர்பில் உள்ளன. இந் நிகழ்வு பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில் நிகழ்கிறது.
நயாகரா அருவியை விட உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட உயரமான அருவிகள் இருந்தாலும் அவை குறைந்த அளவு நீரையே தருகின்றன. நயாகரா அருவியின் உயரமும் கொள்ளவும் சேர்ந்தே அதற்கு பெரும்புகழைத் தேடித்தந்தன. வெனிசுலாவில் உள்ள தேவைதை அருவியே 979 மீட்டர்கள் உயரத்தோடு உலகின் மிக உயரம் கொண்ட அருவியாக இருக்கிறது.

மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)

குதிரை லாட அருவி அருகே செல்லும் மெய்ட் ஆப் த மிஸ்ட் படகு.
மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன.

கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )

பிரைடல் வெய்ல் அருவி அமெரிக்க பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மர படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.
பிரைடல் வெய்ல் அருவியை பார்க்க அமைக்கப்பட்டுள்ள மர படிக்கட்டுக்கள்.

வானவில் பாலம் (Rainbow Bridge)

வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.

வானவில் பாலம் சுற்றுவட்டக்காட்சி.
வானவில் பாலம் சுற்றுவட்டக்காட்சி.

புவியியல்

இவ்வருவி 10,000 ஆண்டுகளுக்கு முன் விசுகான்சின் பனியாற்றின் மூலம் உருவானது. இப்பனியாறே அமெரிக்கப் பேரேரிகள் உருவானதற்கு காரணமாகும்.

வரலாறு

நயாகரா என்ற பெயர் எப்படி இவ்வருவிக்கு வந்தது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. பிரூசு டிரிக்கர் என்ற அறிஞரின் கூற்றுப்படி இது இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் நயாக்கராராகே என்று அழைக்கப்பட்டார்கள் அதன் மூலம் வந்திருக்கலாம் என்கிறார். ஜியார்ஜ் சூடுவர்ட் என்ற அறிஞர் பழங்குடிகளின் நகரான ஓங்னியாகரா என்பதில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார். என்றி சுகுல்கிராப்ட் என்ற அறிஞர் இது மோகாக் என்ற பழங்குடியினரின் சொல் என்கிறார்.

வணிகம்

மின் ஆற்றல்

நயாக்கரா அருவியின் ஆற்றல் மின் உற்பத்திக்கு உகந்தது என அறியப்பட்டது. இவ்வருவியின் நீரை முதலில் கட்டுக்குள் கொண்டு வர 1759ல் முயன்றார்கள்.

அருவி அல்லது நீர்வீழ்ச்சி - Waterfalls

அருவி அல்லது நீர்வீழ்ச்சி என்பது, ஆறு போன்ற நீரோட்டம், சடுதியான நிலமட்ட வேறுபாட்டைக் கொண்ட, அரிப்புக்கு உட்படாத பாறை அமைப்புக்களில் மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டத்துக்கு விழுவதால் உண்டாகும் நிலவியல் அமைப்பு ஆகும்.
சில அருவிகள் அரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உருவாகின்றன. இதனால், ஆற்றின் நீரோட்டப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுச் சடுதியான, கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், அருவிகள் உருவாகாமல், நிலச்சரிவு, நிலவெடிப்பு, எரிமலைச் செயற்பாடுகள் போன்ற சடுதியான நிலவியல் விளைவுகள் ஏற்படுகின்றன.
அருவிகள் செயற்கையாகவும் உருவாக்கப்படக் கூடும். பொதுவாக இவை பூங்காக்கள், நிலத்தோற்ற வடிவமைப்பு ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுவது உண்டு.

புகழ்பெற்ற உலக அருவிகள் சில


ஆஸ்திரேலியாவின், விக்டோரியாவில் உள்ள ஓட்வே தேசியப் பூங்காவுக்கு அருகில் அமைந்துள்ள ஹோப்டூன் நீர்வீழ்ச்சி

அருவி

தமிழகத்தில் உள்ள அருவிகள்

நீர்நிலை (body of water)


நார்வே நாட்டில் உள்ள ஒரு நீர்நிலை

நீர்நிலை (body of water) என்பது எல்லா வகையான நீரின் தொகுப்புகளையும் குறிக்கும். இது பொதுவாக புவிப்பரப்பின் மீது காணப்படும். நீர்நிலை என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள், சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர்நிலைகளையும், ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்நிலைகளையும் குறிக்கும்.
தேங்கி நிற்கும் அல்லது தேக்கி வைக்கப்பட்ட நீர் நிலைகளை நீர்த்தேக்கம் என்கிறோம்.

பொருளடக்கம்

நீர்த்தேக்கம் வகைகள்

♦ பள்ளத்தாக்கு அணை நீர்த்தேக்கம்
♦ கரையோர நீர்த்தேக்கம்
♦ சேவை நீர்த்தேக்கம்

பட்டியல்


தமிழ்
ஆங்கிலம்
வேறு
விளக்கம்
1
அருவி
water fall
Stream
நீர்வீழ்ச்சி
மலை, குன்று போன்றவற்றில் இருந்து வேகத்துடன் விழும் நீர்
2
ஆறு
river
நதி
இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம்

சிற்றாறு
Rivulet



காட்டாறு
jungle stream/river



ஓடை
brook

அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

சிற்றோடை
Brooklet


3
நீரோட்டம், நீர்த்தாரை
Stream (current)
ஆற்றொழுக்கு


நீரோடை
A water-course



விசை நீரோடை
torrent



கீழாறு
Undergroundstream

பூமியினுள்ளோடும் ஆறு

நீரூற்று
fountain, spring

தண்ணீர் நிலத்துக்கடியே இருந்து வெளியே தோன்றும் பகுதி (இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை)

நீர்ச்சுனை, . சுனை
Mountain Pool; a spring or fountain on a mountain

மலையிடத்து இயல்பாயமைந்த நீர் ஊற்று நிலை

நீர்த்தாரை
fountain



ஊறணி, ஊற்று
A fountain, a spring of water

(பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது)

ஊருணி (1)
Drinking water tank
ஊரார் அனைவரும் உண்பதற்குரிய நீர்நிலை
உண்பதற்கு, பருகுவதற்குப் பயன்படும் நீர்நிலை

இலஞ்சி (இலைஞ்சி)
A natural or artificial reservoir, tank for drinking and other purposes



கிணறு
Well



உறை கிணறு
Ring Well

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

நடைகிணறு (நடை கேணி)
(Large well with steps on one side)

இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

கேணி
large well, A square or oblong walled tank

அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

குட்டை
small pond, small pool
சிறிய குட்டம்
மழை நீரின் சிறிய தேக்கம், மாடு முதலியன குளிப்பாட்டும் நீர் நிலை

குளம்
A tank, a pond

செயற்கையான நீர்த் தேக்கம், குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

பொய்கை
natural pool or natural pond or natural tank
Spring Pond

இயற்கையிலுண்டான நீர்நிலை, நீரூற்று உடையது

மடு
deep pool in a river

ஆற்றிடையுடைய ஆழமான பகுதி.

குட்டம்
(Large Pond)
பெருங் குட்டை


குண்டம்
-(Small Pool)

சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

குண்டு
A pool, a basin of water

குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

தடாகம்
Pond, lake

தடாகத்தில் தாமரைச் செடிகள் வளரும்.

வாவி
Tank
தடாகம்







கயம்
tank, lake, Moat

வற்றாத குளம், அகழி

ஏரி
lake, A large tank or reservoir for irrigation
குளம்
வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படும் இயற்கையான நீர் நிலை

பண்ணை




ஏல்வை













4
கழிமுகம்
Estuary, firth

ஆறு கடலொடு கலக்கும் சங்கமுகம்

கயவாய், முகத்துவாரம்
Estuary

பகுதி மூடியதும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆறுகள் அல்லது சிற்றாறுகள் கலப்பதும், கடலுடன் தொடர்புடையதுமான, கரையோர நீர்ப்பரப்பு

கடற்கழி
firth
நீண்ட, குறுகிய கழிமுகம்
கழிமுகத்தின் இசுக்கொட்லாந்தியச் சொல்

முகத்துவாரம்
Mouth of a firth or Estuary

நீண்ட, குறுகிய கழிமுகத்தின் வாய்

காயல், களப்பு
lagoon
உப்பங்கழி (2)


கடல்




உப்பங்கழி
Backwater, Salt-pan



காயல்
Backwater



உப்பளம்
Salt-pan



கடல்வாய்க்கால்
Lagoon
உப்பங்கழி


அல்குகழி


சிறிய உப்பங் கழிநிலம்

அகழி
Moat

கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

ஆழிக்கிணறு
Well in Sea-shore

கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு






காரானை (2)
Waterspout (3)

கடலின்மீதுகுவிந்து கீழிறங்கி நீரைமுகந்து பெருந்தூண் போல நிற்கும் மேகம்

நீர்த்தம்பம்
Water spout
நீர்த்தாரை?
நீரை வெளியேற்றும் குழாய்

சொல்லும் பொருளும்

நீர்நிலைகளை உணர்த்தும் தமிழ்ப்பெயர்களைப் பொருள்நுட்ப வேறுபாடுகளுடன் இங்குக் காணலாம்.
  • அகழி - அரண்மனைகளில் பெய்யும் மழைநீரை சேமிக்க கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
  • அயம் - அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை. [1]
  • ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) - கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
  • இலஞ்சி - பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
  • கயம் - சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
  • கழி - உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
  • சுனை - மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.
  • மடு - சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
  • குட்டை - குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர். [2]
  • கூவல் - கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.

நிகண்டு காட்டும் சொற்கள்

இலைஞ்சி, பண்ணை, ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை, வலயம், சுனை, சிறை, பட்டம், உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி, தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம், நளினி, இலந்தை, மூழி, குழி, குளம். [3]

வகைகள்

சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'குளம் ' என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை 'ஊருணி ' எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 'ஏரி ' என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை 'ஏந்தல் ' என்றும், கண்ணாறுகளை உடையது 'கண்மாய் ' என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர். [4]