Wednesday, July 3, 2013

வடை பலகார வகைகளில் ஒன்றாகும் - Vadai


வடை
Vadai (1).JPG
உளுந்து வடை
தொடங்கிய இடம்
வேறு பெயர்(கள்) வடா, வடை
தொடங்கிய இடம் இந்தியா
பகுதி ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, இலங்கை
விவரம்
முக்கிய மூலப்பொருட்(கள்) பருப்பு அல்லது உருளைக்கிழங்கு, வெங்காயம்
உளுந்து வடைகள்
பருத்தித்துறை வடை
கடலை வடை
A view of Vadai

வடை பலகார வகைகளில் ஒன்றாகும். உணவுடனும் சிற்றுண்டியாகவும் பரிமாறுவர். தமிழர்களின் பெரும்பாலான விழாக்களிலும் சடங்குகளிலும் வடை பொதுவாகப் பரிமாறப்படும். இலங்கை, தென்னிந்தியா மக்கள் பலரும் வடையை விரும்பி உண்பர். உளுந்து வடை, பருப்பு வடை என்பன பரவலான வடை வகைகள். உளுத்தம் பருப்பில் செய்யும் வடையை உளுந்து வடை என்றும் மென்மையாக இருப்பதால் மெதுவடை என்றும் அழைப்பர். கடலைப் பருப்பில் செய்வதை பருப்பு வடை, கடலை வடை, மசாலா வடை என்றும் அழைப்பர். இந்து மதத்தில் அனுமாருக்கு வடை மாலை சாத்துவது சிறப்பு.

பொருளடக்கம்

செய்முறை

உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக உப்புச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் எண்ணெயில் போட்டு வடை சுடலாம். உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடுவர். ஏனேனில் அப்பொழுதுதான் வடை முழுவதுமாக வெந்து மெதுவாக இருக்கும்.

வடை வகைகள்

வடைப் பலகாரங்கள்

வடையைச் சாம்பார், தயிர் ஆகியவற்றில் போட்டும் ஒரு பண்டமாகக் கொடுப்பர். இவற்றை முறையே சாம்பார் வடை, தயிர் வடை என அழைப்பர்.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

No comments:

Post a Comment