தோசை | |
---|---|
தோசை |
|
தொடங்கிய இடம் | |
வேறு பெயர்(கள்) | தோசை, தோசா, தோச, சக்குளி |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளா |
விவரம் | |
முக்கிய மூலப்பொருட்(கள்) | அரிசி |
வேறுபாடுகள் | மசாலா தோசை, ரவா தோசை, வெங்காய தோசை, நெய்த் தோசை, பேப்பர் ரோஸ்ட் |
தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும்.
பொருளடக்கம் |
பெயர் தோற்றம்
தோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது.[1]தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர்.
உடன் பரிமாறுவன
தோசையினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன.வகைகள்
தோசையில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில:- மசாலா தோசை - பொதுவாக உருளைக் கிழங்குப் பிரட்டலுடன் பரிமாறப்படும் தோசை.
- வெங்காய தோசை
- நெய் தோசை/ரோஸ்ட்
- முட்டை தோசை
- ரவா தோசை
- குண்ணுத்தோசை
- செய்முறுக்கல்
- அடை
- பொடி தோசை
- பேப்பர் ரோஸ்ட்
- கல் தோசை
- சாதாரண தோசை
- தக்காளி ஊத்தப்பம்
- வெங்காய ஊத்தப்பம்
- செட் தோசை
செய்முறை
- புழுங்கல் அரிசி - 400 மில்லிகிராம்
- உளுத்தம்பருப்பு - 100 மில்லிகிராம்
- உப்பு - தேவையான அளவு
- ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம்.
- அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது.
- அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும்.
- விருப்பம் என்றால் நிறுமூட்டுவதற்காக சிறிதளவு மஞ்சள் சேர்த்துக்கொள்ளலாம்.
- பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும்.
- தோசைக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர்.
- புளித்த மாவினை தோசைக் கல்லில் ஊற்றி தாள் போல் தேய்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் வேகவைத்து எடுக்கவும்.
பருத்தித்துறைத் தோசை
பருத்தித்துறைத் தோசை பெரும்பாலான ஈழத்தவர்களால் பேசப்படும், விரும்பி உண்ணப்படும் தோசையாகும். இத்தோசை உழுந்து, அரிசி, கோதுமைமா என்பன கலந்து செய்யப்படும். இத் தோசைக்கு வெந்தயம் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். இதற்கான கலவை தென்னங்கள்ளோ அன்றி பனங்கள்ளோ விட்டுப் புளிக்க விடப்படும். பருத்தித்துறையில் இருக்கும் ஓடக்கரை வீதிகளில் விற்கப்படும் இத் தோசைக்கு மவுசு அதிகம். பல்வேறு நகரங்களில் இருந்தும் பலர் இத்தோசைக்காகவே பருத்தித்துறைக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள்.பருத்தித்துறைத் தோசை செய்யும் முறை
தேவையான பொருட்கள்செய்யும் முறை
- உளுத்தம்பருப்பு - 1 சுண்டு
- அரிசி - 1 சுண்டு
- கோதுமை மா - 2 சுண்டு
- வெந்தயம் - 2 மேசைக்கரண்டி
- தென்னங்கள் அல்லது பனங்கள் - 5 மேசைக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- அப்பச்சோடா - ஒரு விரல்நுனி அளவு
தொட்டுக்கொள்ள
- உளுத்தம் பருப்பையும், அரிசியையும், வெந்தயத்தையும் தனித்தனியான பாத்திரங்களில் போதுமான அளவு நீர் விட்டு எட்டிலிருந்து பத்து மணித்தியாலங்கள் வரை ஊற வைக்கவும்.
- கோதுமைமாவை ஆவியில் இருபதிலிருந்து முப்பது நிமிடங்களை வரை அவித்து கட்டி இல்லாமல் சலித்து எடுக்கவும்.
- ஊற வைத்த உளுத்தம்பருப்பையும், அரிசையையும், வெந்தயத்தையும் நன்கு கழுவி எடுத்து அளவான தண்ணீர் விட்டு பசுந்தாக அரைத்தெடுக்கவும். அரிசியையும், உளுத்தம்பருப்பையும் தனித்தனியாக அரைப்பது நல்லது.
- அரைத்தெடுத்தவைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு அதனுள் அவித்த கோதுமை மா, உப்பு, கள், அப்பச்சோடா என்பவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். தோசையாக தட்டில் ஊற்றிச் சுடுவதற்கு ஏற்ற பதத்துக்கு ஏற்ப தண்ணீர் விட்டுக் கலக்க வேண்டும்.
- பாத்திரத்தை இறுக மூடி மீண்டும் எட்டிலிருந்து பத்து மணித்தியாலங்கள் வரை வைக்கவும். கலவை புளித்து, பொங்கி ஊற்றுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால் உயரமான பாத்திரங்களிலேயே இக்கலவையைப் புளிக்க வைக்க வேண்டும்.
- குறிப்பிட்ட காலக்கெடுவின் பின் புளித்திருக்கும் கலவையை அகப்பையால் நன்கு கலக்கி விட்டு தோசைத்தட்டில் ஊற்றிச் சுட்டுக் கொள்ளலாம். குண்டாழமான அகப்பை இதற்கு உகந்தது.
- வெள்ளைச்சம்பல் (பச்சைச்சம்பல் - பச்சைமிளகாயில் அரைக்கப்படுவது)
- சிவத்தச்சம்பல் (செத்தல் மிளகாயை மெலிதாக எண்ணெய்யில் வறுத்து உரலில் இடிக்கப்படுவது)
- தூள் (வறுத்த செத்தல் மிளகாயுடன், உளுத்தம்மூக்கும் கலந்து இடிக்கப்படுவது. இது பல மாதங்களுக்குப் பழுதடையாமல் இருக்கக் கூடியது)
- கத்தரிக்காய்ப் பிரட்டல் (கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி பச்சைமிளகாய், வெங்காயம் கலந்து செய்யப்படுவது)
No comments:
Post a Comment